நிலவேம்புக் குடிநீர் எப்போது குடிக்க வேண்டும்?

1 minute read
0
டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் இந்தச் சூழலில், டெங்குவாக இருந் தாலும் சரி அல்லது சாதாரணக் காய்ச்சலாக இருந்தாலும் சரி, முதல் நடவடிக் கையாக நிலவேம்புக் குடிநீரை எடுத்துக் கொள்ளலாம்.
நிலவேம்புக் குடிநீர் எப்போது குடிக்க வேண்டும்?
ஒரு வயது க்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்புக் குடிநீர் கொடுக்கக் கூடாது. 3 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 15 மி.லி. முதல் 30 மி.லி.வரை மருத்துவர் அறிவுரையின்படி கொடுக்கலாம். 

பெரிய வர்கள் 60 மி.லி. வரை எடுத்துக் கொள்ளலாம். காலை மாலை என இரு வேளையும், தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இது பக்க விளைவுகள் அற்றது.

நிலவேம்புக் குடிநீர் எடுத்துக் கொண்ட முதல் மூன்று நாட்களுக்குப் பிறகும் காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி போன்றவை இருந்தால், உடனடியாக அருகிலுள்ள அரசு, தனியார் மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதி க்கவும். 

அதை விடுத்து, சுய மருத்துவமாக நிலவேம்புக் குடிநீரை மட்டுமே எடுத்துக்கொண் டிருக்கக் கூடாது.கர்ப்பிணிகள், பாலூட்டும் அம்மாக்கள் என எல்லோரும் நிலவேம்புக் குடிநீரை எடுத்துக் கொள்ளலாம். 
நீரிழிவு, புற்று நோய் போன்ற இதர நோய் பாதிப்புகள் உடைய வர்கள், மருத்துவர் பரிந்துரையுடன் நிலவேம்புக் குடிநீரை எடுத்துக் கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் டெங்கு ஏற்பட்டால், வழக்கத்தை விட அதிக உதிரப் போக்கு இருக்கும். 

எனவே, அந்தக் காலத்தில் உடல்வலி, காய்ச்சல் ஆகிய வையும் இருந்தால் அலட்சி யமாக இருந்து விடாமல், உடனடியாக மருத்துவ மனைக்குச் செல்லவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 15, April 2025
Privacy and cookie settings