பித்தப்பை கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் !

2 minute read
0
பித்தப்பைக் கற்களால் பாதிக்கப் படுவோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். 
பித்தப்பை கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள்
உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை.

இந்த வலியானது கடுமை யாகிப் பல மணி நேரம் நீடித்து, குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப் படுத்துவது அடுத்த வகை. 

மூன்றாவது வகையானது, வலது புற விலா எலும்பு களைச் சுற்றி வந்து, முதுகுப்புறம் வரைக்கும் சென்று, தோள் பட்டை வரை வலி பரவும். 
இது மாரடைப்புக் கான வலி போலத் தோன்றும். முக்கிய மாகக் கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிட்டதும் இந்த வலி ஏற்படும், 

பித்தப்பைக் கற்கள் பித்தப் பையில் அழற்சியை ஏற்படுத்து மானால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதுகுப் புறம் வரும்.
பித்த நீர்க் கற்கள் பித்தப் பையை அடைத்து விடுமென்றால் நோயாளிக்கு மஞ்சள் காமாலை வரும்.
அழகான தலை முடி பெற செய்ய வேண்டியது என்ன?
இதற்கு 'அடைப்புக் காமாலை' என்று பெயர். சில பேருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது. 

வேறு பாதிப்பு களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும் போது, பித்தப் பையில் கற்கள் இருப்பது தெரிய வரும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 1, April 2025
Privacy and cookie settings