மலேசியா, சீனா உறவில் பாலமாக விளங்கும் பாண்டா !

2 minute read
0
மலேசியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக் கிடையே நட்பினை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 
உறவில் பாலமாக விளங்கும் பாண்டா
அவற்றில் ஒன்றாக இருப்பது, பாண்டாக்களை இரு நாடுகளு க்கும் இடையே பரிமாறிக் கொள்வது.
இந்த ஒப்பந்தப்படி, சீனாவில் இருந்து மலேசியாவிற்கு பரிமாறப்படும் பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்து, 2 வயதானதும் மீண்டும் சீனாவிற்கு அனுப்புவதே முக்கிய நோக்கமாகும்.

இதன்படி மலேசியாவில் பிறந்த பாண்டா ஒன்றுக்கு பெயர் சூட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா கோலாலம்பூரில் நடைப்பெற்றது. 

இதில் கலந்துக் கொண்ட அந்நாட்டு அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், 'சீன மொழியில் 'யீயீ' என பெயர் சூட்டப் பட்டுள்ளது. 'யீயீ' என்றால், நட்பு என்பது பொருள். இதனை பறை சாற்றும் விதமாகவே இப்பெயர் சூட்டப் படுகிறது' என கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 2, April 2025
Privacy and cookie settings