வெள்ளத்தில் டிக்டாக் செய்ய முயன்ற இளைஞர் உயிரிழப்பு !

1 minute read
0
தெலங்கானா வில், டிக் டாக் மோகத்தால் இளைஞர் ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
வெள்ளத்தில் டிக்டாக் செய்ய முயன்ற இளைஞர்




தெலங்கானா மாநிலம் பிரேம்கல் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் , தனது நண்பர்கள் இரண்டு பேருடன், கப்பலால் தடுப்பணை பகுதியில் குளிக்கச் சென்றுள்ளார். 
அப்போது, தடுப்பணை யிலிருந்து தண்ணீர் பாய்ந்து வரும் பகுதியில் நின்று, மூவரும் டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர். அந்த நேரம் திடீரென அதிகமாக பாய்ந்த வெள்ளம், தினேஷ் உட்பட மூவரையும் அடித்துச் சென்றது.

இதில் இருவர் பத்திரமாக கரை ஒதுங்கிய நிலையில், தினேஷ் மட்டும் மாயமானார். 




இது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் 48 மணிநேரமாக தேடி தினேஷின் உடலை கண்டெடுத்தனர். 
டிக் டாக் மோகத்தால் இளைஞர் உயிரிழந்த சம்பவம், குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 11, April 2025
Privacy and cookie settings