சளி பிடித்திருந்தால் உடனே இதை செய்ங்க !

6 minute read
காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனை களால் அதிகம் அவஸ்தைப் படக்கூடும்.
சளி பிடித்திருந்தால்
இந்த சளி, இருமலை பலர் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி குடித்து தற்காலிகமாக நிவாரணம் காண்பர். ஆனால் இந்த சளி, இருமலுக்கு நமது சில பாட்டி வைத்தியங்கள் நல்ல தீர்வை வழங்கும் என்பது தெரியுமா?

பாட்டி வைத்தியங் களின் மூலம் உடல்நல பிரச்சனை களுக்கு தீர்வு காணும் போது, அது பிரச்சனை களை மட்டும் சரி செய்வதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கி யத்தையும் தான் மேம்படுத்தும். 
மேலும் பாட்டி வைத்தியங்கள் எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் அச்சமின்றி எவர் வேண்டு மானாலும் பின்பற்றலாம். உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல் பிடிக்கிறதா? 

அப்படி யானால் கீழே கொடுக்கப் பட்டுள்ள நம் முன்னோர்கள் பின்பற்றிய சில எளிய கை வைத்தியங்களை மேற்கொள்ளுங்கள். இதனால் உங்கள் சளி, இருமல் பிரச்சனை போவதோடு, உடல் ஆரோக்கிய மாகவும் இருக்கும்.

துளசி
துளசி
துளசி மிகச்சிறந்த மூலிகை. இது சளி, இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கக் கூடியது. 

அதற்கு துளசி சாற்றுடன், சரிசம அளவில் வெங்காயச் சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து, தேன் கலந்து குடிக்க வேண்டும். இதனால் சளி, இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.
Tags:
Today | 9, April 2025
Privacy and cookie settings