மாணவியை மயானத்தில் பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள் !

1 minute read
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்துள்ள ஜடையம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதுள்ள மாணவி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
15 வயது மாணவியை மயானத்தில்
இந்நிலையில், அந்த மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன் தன்னை 5 மாணவர்கள் பலாத்காரம் செய்து அதை கைப்பேசியில் பதிவு செய்து மிரட்டி வருவதாகவும், 1098 என்ற சைல்டு ஹெல்ப்லைனுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தருமபுரி மாவட்ட சைல்டு லைன் இயக்குனர் சைன்தாமஸ் மற்றும் ஆனந்தி அம்பிகா ஆகியோர் மாணவியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர்.

 இந்த விசாரணைக்கு பின் தர்மபுரி ஆட்சியர் விவேகானந்தன் மற்றும் எஸ்.பி. லோகநாதனிடம் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரினை அடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் லோகநாதனின் உத்தரவின் பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு 6 பேரை பிடித்துள்ளனர்.

விசாரணையில், அந்த மாணவியை கடந்த 8ம் திகதி 3 பேர் ஆர்.கோபிநாதம்பட்டி மயானத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தபோது

அவர்களுடன் இருந்த மாணவர் ஒருவர் தனது கைபேசியில் வீடியோ எடுத்தள்ளார். இதை அவர்கள் தங்களுடைய நண்பர்கள் மேலும் இருவருக்கு காட்டியுள்ளனர்.

பின்னர் அந்த இருவரும், மாணவியை தங்களது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை "வாட்ஸ்அப்பில்" வெளிட்டு விடுவதாக மிரட்டி கடந்த 10ம் திகதியன்று மாணவியை மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings