குழந்தையைத் தொலைத்து விட்டால் தேட உதவும் புதிய தளம் !

1 minute read
இந்தியாவில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணா மல் போகின்றனர் என்றும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்
குழந்தையைத் தொலைத்து விட்டால் தேட உதவும் புதிய தளம் !
என்றும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகமும் இருக்கிறது.

இப்படி குழந்தைகள் தொலைந்தால் www.trackthemissingchild.gov.in இணையத் தளத்தில் மட்டுமே காண முடியும். 

அதுவும் காவல் துறையினர் மட்டுமே தொலைந்த குழந்தைகளின் புகைப் படங்களையும் பதிவேற்ற முடியும்.
இந்நிலையில் தொலைந்த குழந்தையை கண்டு பிடிக்க மத்திய அரசின் சார்பில் www.khoyapaya.gov.in என்ற முகவரியில் புதிய வலைத் தளம் தொடங்கப் பட்டுள்ளது.

இந்த புதிய  இணையத் தளத்தை பொதுமக்கள் நேரடியாக பயன்படுத்தி தொலைந்த குழந்தை குறித்த விவரங்களையும், புகைப் படத்தையும் பதிவேற்றலாம். 

இதன் மூலம் குழந்தையை கண்டுபிடிக்க முடியும் என்று நம்பப் படுகிறது.

இந்த இணையத் தளத்தை பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகமும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறையும் இணைந்து நிறுவியுள்ளது.
அந்தந்த ஊரில் உள்ள காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் மீட்பு மையம் உதவியுடன் இந்த இணையதளம் செயல்படும்.

தற்போது இந்த இணையதளம் ஆங்கிலத்தில் உள்ளது. மிக விரைவில் ஹிந்தி மற்றும் இதர பிராந்திய மொழிகளிலும் வரவுள்ளது.

அது மட்டு மின்றி, இந்த இணையத்தளத்தை மிக விரைவாக உபயோகப் படுத்தவும், எளிதாக அனைவருக்கும் சென்றடையவும் 

இந்த தளத்தை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இணைக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings