இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்க"மாம்".....!!! வாசித்து தெரிந்து கொள்ளவும்.

0
பெண்களை அடிமைப் படுத்துவதாகவும், தீவிரவாதத்தை போதிப்பதாகவும் கடந்த 2 தசாப்தங்களாக விமர்சிக்கப்படும் ஒரு மதத்தை (இஸ்லாத்தை) இன்று உலகெங்கும் உள்ள பலரும் ஏற்றுக்கொள்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். அது ஏன்???


என்ற கேள்விக்கு விடை தேடினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது.

கட்டுரையை ஆரம்பிக்க முன்னர், இந்த போட்டோவில் இலக்கமிடப்பட்டுள்ள பெண்களை யார் என்று அறிந்துகொள்வோம். இன் ஷா அள்ளாஹ்.

01: யுவான் ரிட்லி எனும் செய்தியாளர். இவர் ஆப்கானை அமெரிக்கா ஆக்கிரமித்த போது, செய்தி சேகரிப்பதற்காக மிகத்தந்திரமாக ஆப்கானுக்குள் ஊடுரிவிய போது தலிபாஙளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

தலிபாஙளின் ஒழுக்கத்தை நேரில் கண்ட இவர், தலிபாஙளை பற்றி மீடியா சொல்லும் பொய்களை அம்பலப்படுத்திவிட்டு, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்...

02: ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை கொலை செய்த அமெரிக்க முன்னாள் அதிபரின் மகள் "ஜென்னா புஷ் ஹாகர்"...

* இக்கட்டுரையை பதிவு செய்ததன் பின்னர் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக யூடியூப் பொய்யான ஒரு வீடியோவை வெளியிட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வரை சகோ. இதுவிஷயத்தில் கவனமாக இருக்கவும்.

 03: பிரிட்டனின் பிரபல மொடல் அழகியாக இருந்த "காமில்லா லேலன்ட்"...

04: இவரும் பிரிட்டனின் பிரபல மொடல் அழகியாக இருந்தவர். "கார்லீ வட்ஸ்"...

 05: பிரான்ஸ் நாட்டு பிரபல பாடகி "டயம் மெலானீ"...

06: நேபாள முன்னணி நடிகை "பூஜா லாமா"...

07: ரஷ்யாவைச்சேர்ந்த மொடல் அழகி "மஷா அலலிகினா"...

08: முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளயரின் மைத்துனி "லாரன் பூத்"...

09: இப்போது பரபரப்பாக பேசப்படும் இந்திய நடிகை மோனிகா எனும் "ரஹீமா"... இப்போது கட்டுரைக்கு வருவோம்....

கடந்த பல வருடங்களாக இஸ்லாம் பற்றி விமர்சிக்காத ஊடகங்களே இல்லையென சொல்லமுடியும். அந்தளவுக்கு அவதூறுகளை சந்தித்தும், முன்னேறி வருகிறது.

பொதுவாக இஸ்லாம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில், அது பெண்கள் பற்றிய தலைப்பு தான். அதோடு சேர்ந்து தீவிரவாதம் என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்வதுண்டு.

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னர், பெண் குழந்தைகள் பிறந்ததும் உயிரோடு புதைத்து கொலை செய்யும் இழிவான நிலையில் இருந்த அந்த மக்களை திருத்தியது "இந்த இஸ்லாம்" தான்.

அவ்வாறு கொலை செய்தால் தலையை வெட்டி மரண தண்டனை என்று சட்டமும் கொண்டு வந்தது. அக்கணமே இக்கொலைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.

(ஆனால் இன்று இந்தியாவில் அது நடக்கிறது.) எனவே இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறது என்ற பேச்சுக்கு இஸ்லாத்தின் ஆரம்ப சட்டமே மரண அடி கொடுத்துவிட்டது.

இன்றைய நாகரீகவாதிகள்! என்று தம்மை சொல்லிக்கொள்வோர் இஸ்லாத்தின் வளர்ச்சி மீதுள்ள பொறாமையை தாங்க முடியாமல், பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற அதே தலைப்பை தான் எடுத்து வைக்கிறார்கள்.

முக்கியமாக முஸ்லிம் பெண்களின் ஆடைகளை விமர்சித்து, சுதந்திரம் பெற்றுத்தருவதாக கூப்பாடு போடுகிறார்கள்.

(முகத்தை மூடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை. அது அரேபிய கலாச்சாரம் மட்டுமே) ஆனால் அவர்கள் சுதந்திரமாக கருதும் நாடுகளில் தானே உலகில் அதிகமாக பெண்கள் மீது வன்முறை நடக்கின்றன? ‪‎

ஆணும்‬ பெண்ணும் சமன் என்ற ஒரு கோட்பாட்டை சொல்கிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறாகும். ஆணும் பெண்ணும் சமன் எனில்....

* உடலில் ஒரு கட்டை கால் சட்டையை மட்டும் அணிந்துகொண்டு ஒரு ஆணுக்கு வெளியில் வர முடியும். ஆனால், ஒரு பெண்ணுக்கு அப்படி அணிந்துகொண்டு வீட்டில் உள்ள குடும்பத்தவர்களின் முன்னால் கூட வரமுடியாது என்பதை உணர வேண்டும்.

(முடிந்தால் இதை சவாலாக ஏற்று செய்துகாட்டட்டும். எனவே ஆணும் பெண்ணும் சமன் அல்ல என்று தெளிவாக தெரிகிறது.) இப்படி "ஆணும் பெண்ணும் சமன்" என்ற ஒரு கபடத்தனமான கருத்தை பரப்புவதன் மூலம்,

ஒழுக்கமாக வாழ்ந்த பெண் இனத்தை ‪#‎அவிழ்த்துக்காட்டும்‬ நிலைக்கு கொண்டுவந்தவர்கள் யாரெனில் இந்த நவ நாகரீகவாதிகள்! தான். பெண்கள் ஒழுக்கமாக இருந்தால் தனது ‪வியாபாரத்திற்கு‬பாவிக்க முடியாது என்பதால்,

அவர்களை நாகரீக பெண்களாக உசுப்பேற்றிவிட்டு, அவிழ்த்துக்காட்ட வைத்து, சினிமா வியாபாரத்தில் விற்றார்கள். இன்னும் அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை காட்டி விற்கிறார்கள்.

ஒரு பொருளை விளம்பரப்படுத்த எதற்கு பெண்ணை காட்ட வேண்டும்??? இது தான் நவநாகரீகவாதிகள்! பெண்களுக்கு கொடுக்கும் கண்ணியமா???

(இஸ்லாத்தின் பார்வையில் இது கூட விபச்சாரமே...) நடிகைகளை வைத்து வியாபாரம் செய்துவிட்டு, அவர்கள் வயதானதும் கைவிட்டு விடுவதும், அவர்கள் அலைந்து திரிவதும் அடிக்கடி காணும் செய்திகள்.

இதற்கும் ‪‎விபச்சார‬விடுதி நடத்துவோருக்கும் என்ன வித்தியாசம்??? இரண்டிலும் பெண்களின் இளமையை வைத்து தானே வியாபாரம் நடக்கிறது???

முடியுமெனில் ‪‎கிழவிகளை‬ மட்டும் வைத்து விளம்பரமும் சினிமாவும் எடுத்து வென்று காட்டுங்கள். அப்போது ஆணும் பெண்ணும் சமன் என்று நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இந்தளவுக்கு இஸ்லாம் மீது அவதூறு பரப்பி, போதாக்குறைக்கு‪#‎வாளால்‬ பரப்பியதாகவும் புரளி கிளப்பி விட்டு அதன் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கு உண்மையில்‪#‎வெட்கம்‬ இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

* இவ்வாறு அவதூற்றுக்கு உள்ளாகியும், இதே மதத்தை பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்  என்றால்,‪ கொஞ்ஞம்‬ நிதானமாக யோசிக்க வேண்டும்.


அவர்கள் யாரையும் கிறிஸ்தவ திருச்சபைகள் விலைக்கு வாங்குவது போல இஸ்லாம் வாங்கவில்லை.

அவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள், ஏராளம் புகழோடும் செல்வாக்கோடும், வசதியோடும் வாழ்பவர்கள். இப்படிப்பட்ட பெண்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்கள் எனில்.....

இஸ்லாத்தின் எதிரிகளால் வர்ணிக்கப்பட்டவாறு இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்தவில்லை என்று #10000000% உறுதியாகிறது.

தன் குடும்ப பெண்களுக்கான (தாய், மனைவி, மகள், சகோதரி) செலவுகளுக்கு ஆண்கள் தான் பொறுப்பாளிகள் என்று கூறி பெண்களை கண்ணியப்படுத்திய மதம் உலகில் ‎இஸ்லாம்‬ மட்டுமே.... எதிரிகள் என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் அவர்களால் இறைவனை வெல்லவே முடியாது.

தாயை விட அள்ளாஹ் 70 மடங்கு அன்பு கொண்டவன் என்பதால் தான், இஸ்லாத்தின் எதிரிகளை தண்டிக்காமல் அவர்கள் உண்மையை ஏற்று திருந்தும் வரை இன்னும் விட்டு வைத்துள்ளான்.

 [அல் குர்'ஆன் 14:42] ‪

மேலும்‬ அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்;

அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். எனவே இவர்கள் திருந்துவதற்கான அவகாசத்தை இறைவன் வழங்கியே இருக்கிறான்.

இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாம் மீது வேண்டுமென்றே குரோதம் கொண்டு இஸ்லாத்தை அழிக்க நினைக்கிறார்கள். உலகின் அனைத்து மதங்களும் தினமும் வீழ்ச்சியடைந்து கொண்டு இருப்பதாக ‎புள்ளி விவரங்கள்‬ தெரிவிக்கின்றன.

அதேவேளை இஸ்லாம் வளர்ச்சியடைவதாக டீவீ செய்திகள் கூட சொல்கின்றன. இலங்கையில் இஸ்லாம் மதத்திற்கு இந்துக்கள் பெருமளவில் மாறுவதாகவும், அதை சட்ட ரீதியாக தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து

இந்து அமைப்பொன்று அண்மையில் கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் செய்தது. அதில் வேடிக்கையாக பொதுபலசேனா‬ எனும் பெளத்த அமைப்பும் இணைந்துகொண்டது.

இதன் மூலம் உலகம் உணரும் உண்மை என்னவெனில், தமது மதங்களில் உள்ள பிழையான கருதுகோள்களை சகிக்க முடியாமல் அதிலிருந்து வெளியேறி உண்மை மதமான இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்று தெளிவாக தெரிகிறது.

 [அல் குர்'ஆன் 9:32] ‪#‎தம்‬ வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள்

 ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். யா அள்ளாஹ்! உலகெங்கும் இஸ்லாத்தை விரிவடைய செய்வாயாக! ஆமீன்.

என் கருத்துக்களில் தவறேதும் இருந்தால் சுட்டிக்காட்டவும். மாற்று மத நண்பர்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். ஜஸாக்கள்ளாஹ் க்ஹைர். வஸ்ஸலாம்.


Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings