ஆந்திராவிலும் கட்டாய ஹெல்மெட்... நாளை முதல் !

0 minute read
தமிழகத்தைத் தொடர்ந்து, ஆந்திராவிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற ஆணை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
 
ஆந்திர தலைமைச் செயலாளர் கிருஷ்ணாராவ் தலைமையில் ஹைதராபாத்தில், சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது

அந்த கூட்டத்தில், சாலை பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்களையும், உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்டுள்ள சில நெறிமுறைகளையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தும்படி உத்தரவிட்ட கிருஷ்ணா ராவ், புதிய விதிமுறையை கண்கானிப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
கட்டாய ஹெல்மெட் சட்டம் நாளை முதல் ஆந்திராவில் நடைமுறைக்கு வரவுள்ளதால், ஆந்திர மாநிலம் முழுவதும் ஹெல்மெட் விற்பனை சூடு பிடித்துள்ளது.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings