நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா?

1. நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ? நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவி யருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது

நோன்பு காலங்களில் கூடலாமா?


அவர்கள் உங்களுக்கு ஆடையா கவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையா கவும் இருக்கின் றீர்கள்.

நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந் ததை அல்லாஹ் நன்கறிவான் அவன் உங்கள் மீது இரக்கங் கொண்டு உங்களை மன்னித்தான்

எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவி யருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக் கொள்ளுங்கள் 

இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்

பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் இன்னும் நீங்கள் பள்ளி வாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவி யருடன் கூடாதீர்கள்

இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும் அந்த வரம்பு களை (த் தாண்ட) முற்படா தீர்கள் இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தி யுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்று களைத் தெளிவாக்கு கின்றான்.

அல்குர்ஆன் 2:187 2.

ஊசி போடலாமா ? உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்ற வற்றை போடக் கூடாது.


3. வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ? தூக்கத்தில் விந்து வெளிப் பட்டால் நோன்பு முறியுமா? எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை.

எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக் கிறார்கள். நூல் : அஹமத், அபூதாவுத்

4. நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடுமா? நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகி விட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்ய வேண்டும். 

(அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)

5. நோன்பு எதை கொண்டு திறப்பது ? நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.
Tags:
Privacy and cookie settings