நான் வேண்டும் என்றால் என் அக்காவை முடுச்சிடு !

திருவனந்த புரம் கோவளம் பகுதியைச் சேர்ந்த சஞ்னு என்பவருக்கும் ஆழப்பி பூஜா என்பவருக்கும் வெகு விமரிசையாக திருமணம் செய்து வைத்தா ர்கள் பெரியவர்கள். 
பூஜா மிகவும் அழகான பெண். கல்யாண த்திற்கு மணப் பெண்ணின் தோழியாக வந்தவர் பூஜாவின் சித்தி பெண் ஐஸ்வர்யா.

கல்யாணத் தின் போதே ஐஸ்வர்யா விற்கு ஏனோ மணமகனை மிகவும் பிடித்துப் போயிற்று. 

அக்கா என்கிற உரிமையில் அடிக்கடிச் சென்று அக்காவைப் பார்க்கும் சாக்கில் சஞ்ச்னுவை பார்த்து நட்பை வளர்த் துள்ளார். இது எதுவும் பூஜாவிற்கு தெரியாது.

மீண்டும் ஒருமுறை சஞ்னு வை பார்க்கப்போன ஐஸ்வர்யா தனது காதலை கூறியு ள்ளார். அழகிலும் வசதியிலும் கொஞ்சம் அதிகம் தான் ஐஸ்வர்யா.

முதலில் ரொம்ப தயங்கி யுள்ளான் சஜ்னு,.. ஒரு நாள் உடம்பைக் கொடுத்து அவனை சரிக்கட்டி விட்டாள் ஐஸ். அதன் பின் மளமள வென்று திட்டம் தீட்டி னார்கள் இருவரும் இந்த நேரத்தில் பூஜா கர்ப்பம் வேறு.
கன்னியா குமரிக்கு சுற்றுலா போக முடிவெடுத்து ,அழைத்துச் சென்றுள் ளார்கள். 

அங்கு கடலில் குளிக்கலாம் என்று கூறி மூவரும் இறங்க, விளையா ட்டுக்கு செய்வது போல் பூஜாவை தண்ணீரில் போட்டு மூச்சு முட்டும் அளவிற்கு புரட்டி யுள்ளனர்.

இதை சில சுற்றுலா பயணிகள் வீடியோவில் பதிவு செய்ய, ஒரு பெரிய அலை பூஜாவை இழுத்துச் செல்ல எந்த பதட்டமும் இல்லாமல் 

ஐஸ்வர்யாவும் சஜ்னுவும் வெளியே வர அப்போது தான் இது சம்திங்ராங் என்று பயணிகளுக்கு உறைத்தி ருக்கிறது.

திடுக்கிட்டு போலீஸில் வீடியோவை கொடுக்க, அதற்குள் இருவரும் அங்கிருந்து எஸ்கேப். இரண்டு நாட்கள் கழித்து கரை ஒதுங்கியது அந்த அப்பாவி பூஜாவின் உடல்.
போலீஸ் ஒரு புறம் தேட ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கழித்து, போலீஸ் அந்த கொடூர கணவனை வளைத்து விட்டது.

அவன் ஐஸ்வர்யாவை கை காட்ட இப்போது இருவரும் கம்பி எண்ணிக் கொண்டிரு க்கிறார்கள். என்ன கொடுமைங்க இது..!
Tags:
Privacy and cookie settings