கூகுள் டூடுலில் ஜல்லிக்கட்டைப் போடுங்க.. அலங்காநல்லூர் மக்கள் !

0 minute read
மதுரை அலங்கா நல்லூரில் ஐந்தாவது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றவர்கள் கூகுள் டூடுலில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போட வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.
கூகுள் டூடுலில் ஜல்லிக்கட்டைப் போடுங்க.. அலங்காநல்லூர் மக்கள் !
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். வெளி நாடுகளில் உள்ள தமிழர்களும் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அலங்கலாநல்லூரில் 5வது நாளாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். 

அவர்கள் உலகம் முழுவதும் தமிழர்களின் ஜல்லிக்கட்டு குறித்தும் தமிழர்களின் அறவழி போராட்டம் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித் துள்ளனர்.

இதற்காக உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் பக்கத்தில் டூடுலாக தமிழர்களின் ஜல்லிக்கட்டை வெளியிட வேண்டும் என அலங்கா நல்லூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:
Today | 2, April 2025
Privacy and cookie settings