கர்ப்பிணி சாப்பிட்ட பிரெஞச் ஃபிரைஸில் பல்லி !

கொல்கத்தாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடை ஒன்றில் பிரெஞ்ச் ஃபிரைஸுடன் செத்த பல்லி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்ப்பிணி சாப்பிட்ட பிரெஞச் ஃபிரைஸில் பல்லி !
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வருபவர் கர்ப்பிணியான பிரியங்கா மொய்த்ரா. அவர் கடந்த செவ்வாய்க் கிழமை காலை

 தனது மகளின் 4வது பிறந்த நாளை கொண்டாட இஎம் பைபாஸ் அருகே உள்ள மெக்டொனா ல்ட்ஸ் கடைக்கு சென்று பிரெஞ்ச் ஃபிரைஸ் ஆர்டர் செய்துள்ளார்.

தாயும், மகளும் பிரெஞ்ச் ஃபிரைஸ சாப்பிடும் போது தான் அதில் பல்லி ஒன்று செத்து கிடந்தது தெரிய வந்தது. பல்லியும் எண்ணெய்யில் நன்றாக ஃபிரை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த பிரியங்காவு க்கு குமட்டிக் கொண்டு வந்தது. 

உடனே அவர் கடை மேனேஜரை அழைத்து பல்லியை காட்ட அவரோ சாதாரண மாக ஒரு சாரி சொல்லி விட்டு சென்று விட்டாராம். 
இதை யடுத்து பிரியங்கா அந்த பல்லியை புகைப்படம் எடுத்து காவல் நிலையத் திற்கு சென்று கடை மீது புகார் அளித்தார். 

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட் டுள்ளது. தற்போது லக்னோவுக்கு சென்றுள்ள பிரியங்கா வின் கணவர் சஞ்சய் மித்ரா விஷயம் அறிந்து அதிர்ச்சி அடைந் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings