விவசாயிகளுக்கு அநீதி இழைத்த முதல்வர்... சீமான் !

1 minute read
வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளை, உடல்நலக் கோளாறு மற்றும் குடும்பப் பிரச்னை காரணமாக இறந்து ள்ளதாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசுக்கு, சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு அநீதி இழைத்த முதல்வர்... சீமான் !
தமிழகத்தில் பருவ மழை பொய்த்து, வறட்சியால் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந் துள்ளனர். 

இதை யடுத்து, தமிழக அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட பிரமாணப் பத்திரத்தில், விவசாயிகள் குடும்பப் பிரச்னை, உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந் துள்ளதாகக் குறிப்பிடப் பட்டது. 

தமிழக அரசின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து, பல தரப்பி லிருந்தும் கண்டன ங்கள் முன் வைக்கப் பட்டன. தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மை எரிக்கப் பட்டது.

இந்நிலை யில், நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப் பாளர் சீமான், தமிழக அரசுக்கு தனது கண்டன த்தைத் தெரிவித் துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ஜெயலலிதா சிறை சென்ற போதும் மரண மடைந்த போதும் அவருக்காக இறந்தவர் களின் குடும்பத்தைத் தேடிப் போய் 
நிவாரணம் அளித்த அ.தி.மு.க அரசு, விவசாய மரணத்துக்கு நிவாரணம் தர மறுப்பது சகித்துக் கொள்ளவே முடியாத பெரும் அநீதியாகும். 

எனவே, வறட்சி யினால் விவசாயிகள் இறக்க வில்லை எனத் தமிழக அரசு தாக்கல் செய்திரு க்கும் பிரமாணப் பத்திரத்தை உடனடி யாகத் திரும்பப் பெற்று, 

இறந்து போன விவசாயி களைப் பற்றிய உண்மை நிலையை உச்ச நீதிமன்ற த்தில் தெரிவிக்க வேண்டும். 

இறந்து போன விவசாயி களின் குடும்பத் துக்கு தலா 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என வலியுறுத்தி யுள்ளார்.
Tags:
Today | 20, March 2025
Privacy and cookie settings