இலாகா பிரியுங்கள்... கொந்தளித்த அமைச்சர்கள் !

கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்களின் இலாகாக்களைப் பிரியுங்கள் என்று தினகரன் ஆதரவு அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனி சாமியிடம் காட்டமாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இலாகா பிரியுங்கள்... கொந்தளித்த அமைச்சர்கள் !
இதனால், அவரச ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட் டுள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, ராணுவக் கட்டுப் பாட்டோடு இருந்த கட்சியினர், அவர் இறந்த பிறகு சுதந்திரமாக மனதில் உள்ள தைப் பேசத் தொடங்கி யுள்ளனர். 

இதன் வெளிப் பாடு, கட்சியில் தினந் தோறும் களேபரம். முதல்வர் எடப்பாடி பழனி சாமியை மாற்ற வேண்டும் என்றும் கட் சிக்குத் துரோகம் செய்த 

ஓ.பன்னீர் செல்வத் துக்கு துணை முதல்வர் பதவி வழங்கி யதைக் கண்டி த்தும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கி யுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனி சாமியை மாற்ற வேண்டும் என்று ஆளுநர் வித்யா சாகர்ரா விடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடிதம் கொடுத்து ள்ளனர். 

பிறகு, முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு எதிராக அடுத்த கட்ட நடவடி க்கை எடுப்பது குறித்து புதுச் சேரியில் உள்ள ரிசார்ட் டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ -க்கள் ஆலோ சனை நடத்தி வரு கின்றனர். 
சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட தினகரன், தன்னுடைய ஆதர வாளர்களுக்கு கட்சிப் பதவியும் எதிர்ப்பாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கியும் அறிவிப்பை தொட ர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. 

அ.தி.மு.க -வில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல், மேலும் பூதாகர மாக தமிழகம் முழு வதும் வெடிக்கத் தொடங்கி யுள்ளது. 

தினகரனின் உருவப் பொம்மைகளை அவரது எதிர்ப்பாளர்கள் எரிக்கி ன்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தும் எதிராக, தினகரன் ஆதரவா ளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும் போது, அ.தி.மு.க -வுக்கு எதிரி அ.தி.மு.க என்றே தோன்றுகிறது. 

அணிகள் இணைந்த பிறகு, கட்சி வலுப்பெறும் என்று கருதிய முதல்வர் எடப்பாடி பழனி சாமியின் ஆட்சிக்கே சிக்கலை ஏற்படுத்த, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வியூகம் அமைத்து வருகின் றனர். முதல் வரை மாற்ற வேண்டும் 

என்ற கோரிக் கையைத் தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ -க்கள் வலியு றுத்தி  வரு கின்றனர்.
ஜெயலலிதா சமாதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ - க்களைத் தங்கள் பக்கம் இழுக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பி லிருந்தும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பி லிருந்தும் பல்வேறு கட்ட நடவடி க்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. 

தற்போது, புதுச்சேரி யில் தங்கி யுள்ள எம்.எல்.ஏ- க்களுக்கு எதிராக அ.தி.மு.க-வினர் கள மிறக்கப் பட்டுள்ளனர். எம்.எல்.ஏ- க்களுக்கு வேண்டப் பட்டவர் களிடம் பலதரப்புப் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

இதன் எதிரொலி யாக, புதுச்சேரி ரிசார்ட்டில் இரண்டு பெண் எம்.எல்.ஏ- க்கள் போர்க் கொடி தூக்கி யுள்ளனர். 

வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்துள்ளனர். அவர்களைச் சமரசப்படுத்தும் வேலையில் தினகரனின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தினகரன் ஆதரவு அமைச்சர்கள் காட்டமாகப் பேசியதாகத் தகவல் வெளியாகி யுள்ளது. 
அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சமரசப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய அமைச்சர்கள் சிலர், கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்களுக்கு சாதகமாகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல் படுகிறார். 

அமைச் சரவை மாற்றத்தில் கூட கொங்கு மண்டலத்தில் உள்ள சிலரது இலாகாக்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'கை' வைக்கவில்லை. 

ஆனால், தினகரன் ஆதரவு என்று சொல்லப்பபடும் அமைச்சர்களின் இலா காக்கள் பறிக்கப் பட்டுள்ளன. 

இதில் பாதிக்கப்பட்ட அமைச்சர் ஒருவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேருக்கு நேராகவே நேற்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு அமைச்சரின் பெயரைக் குறிப் பிட்டு, ‘அவரது இலாகாவை எனக்கு பிரித்துக் கொடுங்கள்' என்று கேட்டார். 

அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலில் சமரசமாகப் பேசியிருக்கிறார். 

சிறிது நேரத்துக்குப் பிறகு, நீங்கள் வேண்டு மென்றால் தினகரன் பக்கம் செல்லுங்கள் எனக்குக் கவலையில்லை என்ற தொனியில் பேசி யுள்ளார். 

இதனால் அந்த அமைச்சர் அங்கிருந்து தொகுதிக்குச் சென்று, தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்றனர். 

இந்தத் தகவல், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்குத் தெரிந்ததும் அவர், முதல்வர் எடப்பாடி பழனி சாமியிடம் பேசினார். 
அப்போது, தினகரனால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் உடனடியாக சமரசம் பேசுங்கள் என்று சொல்லி யிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தூது பேச, முதல்வர் தரப்பிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், சபா நாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். 

ஆட்சிக்கு ஏற்பட்ட சிக்கல் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஆலோச னையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. கட்சியைக் காப்பாற்ற ஓ.பன்னீர் செல்வத்துடன் கைகோத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியைக் காப்பாற்ற கடுமையாகப் போராடி வருகிறார்.
Tags:
Privacy and cookie settings