நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் சட்டம்?

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும் போது, கூடவே மனநல வல்லுனர் களையும் மாணவர் களுக்கு ஆலோசனை வழங்க நியமிக்க வேண்டும் என்று ஒருவர் சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்டிருந்தார்.
நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் சட்டம்?
இது கிண்டலுக்காகப் பதிவு செய்யப்பட்ட ஒன்று என்றாலும், டாக்டர் ஆகும் ஆசையுடன் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12-ம் வகுப்புத் 

தேர்வு எழுதிய மாணவர்கள், நீட் தேர்வு விவகாரம் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மனரீதியாகப் பாதிக்கப் பட்டுள்ளனர்.

நீட் தேர்வு நடக் குமா நடக்காதா என்ற குழப்ப ங்கள் இருந்த சமயத் தில், "நீட் தேர்வில் இருந்து விலக்கு அளி க்கும் சட்ட த்தை நிறை வேற்றி இருக் கிறோம். 

அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார். எனவே, நீட் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகா தாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அடிக்கடி கூறி வந்தார்.

தேர்வு தந்த குழப்பம்
இந்த நம்பிக்கை வார்த்தைகளை தமிழக மாணவர்கள் நிஜமாகவே நம்பினார்கள். பெரும் பாலான மாணவர்கள் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் நமக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து விடும் என்று எதிர் பார்ப்போடு இருந்தனர். 

நீட் தேர்வு க்கு தயா ரான ஒரு சில மாணவர்களும் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்ப டையில் தமிழ கத்தில் மாணவர் சேர்க்கை இருக்கும் என்பதால், ஏனோ, தானோ என்று தான் படித் தனர். கவனம் செலு த்திப் படிக்க வில்லை.

ஆனால் தான் நீட் தேர்வு எழுதிய பெரும் பாலான மாண வர்கள் தோல்வி யடைந்தனர். தமிழ கத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய ஒரு மாணவர் கூட அகில இந்திய ரேங்க் பெறவில்லை. 

தமிழ கத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய வர்களில் பல மாண வர்கள் 720 மதிப் பெண் களுக்கு அதிக பட்சமாக 655 மதிப் பெண் களை மட்டும் தான் எடுத் தனர்.

தமிழக சட்டப் பேரவை யில் நிறை வேற்றப் பட்ட நீட் தேர்வில் இருந்து விலக் குக் கோரும் சட்டத் துக்கு குடியரசுத் தலை வரின் ஒப்புதல் பெற முடிய வில்லை. 

இந்த சூழலில் தான் நீட் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் இருந்து தமிழகப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 85 சத விகித ஒதுக்கீடு என்று சொல்லியது தமிழக அரசு.
ஆனால், உச்ச நீதி மன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. வேறு வழி யில்லாமல் மீண்டும் மத்திய அரசின் கைகளை எதிர் பார்த்து தமிழக அரசு காத்திரு க்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை 

அமைச்சர் சி. விஜய பாஸ்கர் என அடுத் தடுத்து பிரதமர் மோடியை சந்தித்த போதி லும் இந்த விவகா ரத்தில் இன்னும் தெளிவு பிறக்க வில்லை.

அவசர சட்டம் பயன் தருமா?

ஜல்லி கட்டு விவகார த்தில் தமிழக அரசுதான் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று கை விரித்த மத்திய அரசு 

இப்போது மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்திலும், தமிழக அரசு அவசர சட்டம் வெளியிடலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். 

இதை யடுத்து அவசரச்சட்டம் வெளியிடப்படும் என்று அமைச்சர் சி. விஜய பாஸ்கர் சொல்லி இருக்கிறார். ஆனால், மத்திய‍ அமைச்சரின் ஒரு தகவலையே, மத்திய ஆளும் கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா மறுத்தி ருக்கிறார். 

எனவே அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல் வதை எவ்வளவு தூரத் துக்கு நம்ப முடியும் என்பது தெரியவி ல்லை.
மேலும், நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தெளி வாகச் சொல்லி விட்டது. 

எனவே, இதில் தமிழக அரசு எடுக்கும் கடைசிகட்ட முயற்சிகள் பலிக்குமா என்று தெரியவில்லை. அப்படியே அவசர சட்டம் கொண்டு வந்தாலும், அதை எதிர்த்து நீட் ஆதரவு மாணவர்கள் உச்  நீதிமன்றம் போனால், மேலும் இழுபறி நீடிக்கும் என்றே சொல்லப் படுகிறது.

எண்ணற்ற அனிதாக்கள்

இந்த சமய த்தில் சில நாட் களுக்கு முன்பு தி.மு.க-வின் சிவசங்கர் தன் முகநூல் பக்கத் தில் எழுதி யிருந்த அனிதா என்ற மாண வியின் நிலை தான் நமக்கு நினை வுக்கு வரு கிறது. 

அரிய லூர் மாவ ட்டம் குழுமூர் கிராம த்தைச் சேர்ந்த அனிதா, அவ ருடைய குடும்ப த்தின் வறிய சூழ லிலும் 12-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப் பெண் களைப் பெற்றார். 

அவர் பெற்ற மதிப் பெண்கள் இது தான்; தமிழ் 195, ஆங்கிலம் 188, இயற்பியல் 200, வேதியியல் 199, உயிரி யியல் 194, கணிதம் 200 என்று வாங்கி யிருந்தார். 
12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் கட்-ஆப் (அனிதாவின் கட் ஆப் 196.5) அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடக்கும் பட்சத்தில், அவருக்கு நிச்சயம் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் இடம் கிடைத் திருக்கும்.

இப்போது தமிழக அரசு சுகாதாரத் துறை மட்டத்தில் நாம் பேசிய போது, இன்னும் சில நாட்களில் கலந் தாய்வு தொடங்கி விடும் 

என்று சொல்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற்றால், 12-ம் வகுப்புத் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தும் விதமாக 

ஒரு ரேங்க் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தயாரித்து வைத் திருக்கிறார்கள்.நீட் தேர்வில் இருந்து விலக்குக் கிடைக்கா விட்டால், 
நீட் தேர்வு அடிப்படையில் தேர்வான மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் ஒன்றையும் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தயாரித்து வைத்திருக்கின் றனர். 

அதிகாரிகளின் முன் ஜாக்கிரதை வியக்கத் தக்கதாகத் தான் இருக்கிறது. ஆனால், நாம் மேலே குறிப்பிட்ட அனிதாவைப் போன்ற மாணவர்கள் இப்படி முன் ஜாக்கிரதையாக இரண் டையும் படித்து வைக்க வில்லை. 

அவர்களுக்கு என்ன சொல்லப் போகிறது இந்தத் தமிழக அரசு?
Tags:
Privacy and cookie settings