சவக்குழியில் விளையாடிய குழந்தை... நாட்களை எண்ணும் சோகம் !

சீனாவில் இரண்டு வயது குழந்தை அரிய வகை நோய் பாதிப்பினால், மரணத்தை எதிர் நோக்கி கொண்டிருக்கும் வேளையில், அவரது தந்தை சவக்குழியில் அக்குழந்தையுடன் விளையாடிய சம்பவம் கண் கலங்க வைத்துள்ளது.
சவக்குழியில் விளையாடிய குழந்தை... நாட்களை எண்ணும் சோகம் !
சீனாவைச் சேர்ந்த Zhang Xin Lei என்ற இரண்டு வயது குழந்தைக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் Thalassaemia என்ற நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் அக்குழந் தையின் பெற்றோர் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சிகிச்சைக்கு மட்டும் £11,000 பவுண்டிற்கு அதிகமாக செலவு செய்துள்ளனர்.

இது போததால் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் சிகிச்சைக்காக பணம் வாங்கியுள்ளனர். 

தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிர் வாழ முடியும். இல்லை எனில் குழந்தை இறக்க நேரிடும். தொடர்ந்து சிகிச்சை மேற்கொள் வதற்கு பணம் வேண்டும். 

தற்போது அவர்களிடம் பணம் இல்லை. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் அவர்களால் கேட்க முடியவில்லை.

இதனால் குழந்தையின் தந்தை இதற்கு மேல் சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்ற எண்ணத்தில்,  அங்குள்ள ஒரு பகுதியில் சவக்குழி ஒன்றை தோண்டி அங்கு இருவரும் விளையாடி வருகின்றனர். 
சவக்குழியில் விளையாடிய குழந்தை... நாட்களை எண்ணும் சோகம் !
இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், தான் Zhang-ஐ இங்கு அழைத்து வந்து விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

ஏனென்றால் அவள் தற்போது மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள். அவளை இங்கு தான் புதைக்க உள்ளோம்.

அதனால் அவளை தினந்தோறும் இங்கு அழைத்து வந்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். 

இதை அக்குழந்தையின் தாய் அருகில் இருந்து கொண்டு பேச முடியாத நிலைமையில் பார்த்துக் கொண்டிருந்தார்.
Tags:
Privacy and cookie settings