சுரங்க பாலத்தின் சுவர் மீது பேருந்து மோதி விபத்து !

பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்க பாலத்தில் குறுக்கே வந்த இருசக்கர வாகன த்தின் மீது மோதா மல் இருக்க பேருந்தை ஓட்டுனர் திருப்பிய போது 
சுரங்க பாலத்தின் சுவர் மீது பேருந்து மோதி விபத்து !

கட்டுப் பாட்டை இழந்து எதிர்புறம் பாலத் தின் சுவர் மீது மோதியது. இதில் ஓட்டுநர் லேசான காயம டைந்தார். 


சென்னை கண்ணகி நகரிலி ருந்து பிராட்வே செல்லும் தடம் எண் 102 பேருந்து இன்று காலை கண்ணகி நகரிலிருந்து காமராஜர் சாலை வழியாக ராஜாஜி சாலை ரிசர்வங்கி சுரங்கப் பாதை வழி யாக சென்றுக் கொண்டிருந்தது. 

ஓட்டுனர் சீனிவாசன் பேருந்தை ஓட்டிச் சென்றார். பாலத்தில் வேக மாக பேருந்து இறங் கும் போது முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் ஒன்று திடீரென குறுக்கே புகுந்தது. 

இதனால் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சீனிவாசன் பேருந்தை வலது புறம் திருப் பினார். 

இதில் அவரது கட்டுப் பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலை யின் தடுப்பின் மீது ஏறி மறுபக்க சாலை யின் குறுக்கே புகுந்து பாலத் தின் சுவர் மீது மோதி நின்றது. 

எதிரில் வாகனங்கள் எதுவும் வராத தால் பெரிய விபத்தும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் பேருந்து வேகமாக மோதியதில் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநர் சீனிவாச னுக்கு காயம் ஏற் பட்டது. 

விபத்து குறித்து பூக்கடை போக்கு வரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத் துனர் அமாவாசை யிடம் விசாரணை நடத்தினர். 


பேருந்து குறுக்கே புகுந்ததால் ராயபுரத்திலிருந்து கடற்கரை நோக்கி காமாராஜர் சாலை, போர் நினைவுச் சின்னம் நோக்கி செல்லும் வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. 

பின்னர் ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு பேருந்து தூக்கி நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி யில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:
Privacy and cookie settings