கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி - சட்டம் என்ன செய்கிறது?

0
வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது பாவம் என்று கூறி னாலும் அந்த வட்டி தொழிலை வைத்து கோடீஸ் வரர்களாக ஆனவர்கள் பலர் இருக்கி றார்கள். 

கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி - சட்டம் என்ன செய்கிறது?
வட்டிக்கு வாங்கிய வர்களோ பணத்தை கட்ட முடியாமல் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கி ன்றனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு கொடுப் பதற்காக வந்த ஒரே குடும்ப த்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளி த்தனர். 

இதில் அப்பாவி பெண்ணும், இரு குழந்தை களும் கருகி உயிரிழந்து விட்டனர்.
கந்து வட்டி கும்பலிடம் சிக்கி மீள முடியாமல் தமிழக த்தில் பல குடும்பங்கள் ஊரை காலி செய்து விட்டு தலை மறைவாக வாழ்ந்து வருகி ன்றனர். 

பலரோ தற்கொலை செய்து கொள் கின்றனர். கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் படி, அதிக வட்டி வசூல் செய்பவர் களுக்கு அதிக பட்ச தண்டனை யாக 

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் கந்து வட்டி தடுப்புச் சட்டம் 2003 இல் கூறப்பட் டுள்ளது. ஆனாலும் இந்த சட்டம் அப்பாவி மக்களை காப்பதாக தெரிய வில்லை.
அப்பாவிகள்

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கி னான் இலங்கை வேந்தன் என்று கூறு வார்கள். கடன் பட்டு விட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரண காரிய மல்ல. 

ஏனெனில் ஒருமுறை கடன் பட்டவர்கள் அதிலி ருந்து மீள முடியாத அளவிற்கு சுழலில் சிக்கிக் கொள் கின்றன.

எத்தனை வட்டி?

கந்து வட்டி, மீட்டர் வட்டி, மின்னல் வட்டி, ரன் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, தினவட்டி, ராக்கெட் வட்டி என 
முதுமையில் தனிமை ஏன் வருகிறது ?
பல்வேறு வகையில் வட்டித் தொழில் தமிழகம் முழுவதும் உள்ளது. வட்டிக்கு பணம் வாங்கும் பல அப்பாவி மக்கள் தான் பலியாகி வரு கின்றனர்.

தோல் தொழிலா ளர்கள்

திண்டுக்கல் மற்றும் சின்னாள பட்டி பகுதியில் இருந்து கந்து வட்டி கும்பல் பணம் கொடுத்து மிரட்டி வருகி ன்றனர். 1000 ரூபாய்க்கு வாரத் திற்கு 100 வட்டி வாங்கப் படுகிறது. 
கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி - சட்டம் என்ன செய்கிறது?
5 ஆயிரம் ரூபாய் தேவை எனில் அவர்களது வீட்டு பட்டா மற்றும் ரேசன் கார்டு போன்ற ஏதாவது ஒரு பொருளை அடமான மாக வாங்கி வைத்து விடுகி ன்றனர்.

தொழிலாளர்கள்

ஒரு வாரம் வட்டி தர தாமதித் தால் அடியாட் களை வைத்து மிரட்டி வருகி ன்றனர். 

நெசவு தொழிலாளர்கள் தோல் தொழிலாளர்கள் வேறு வழியின்றி வெளியூ ருக்கு செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. 
கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் !
அவ்வாறு சென்றா லும் குடும்ப த்தில் உள்ளவர் களை அவர்கள் மிரட்டி வருகி ன்றனர்.

மீட்டர் முதல் மின்னல் வரை
ஏழை மக்கள் மட்டு மல்லாது நடுத்தர மக்களும் வட்டிக்கு பணம் வாங்கி சிக்கிக் கொள்கின் றனர் இவர்கள் அதிகம் மீட்டர் வட்டிக்கு தான் பணம் வாங்கு கின்றனர். 

ஒரு லட்சம் ரூபாய்க்கு 85 ஆயிரம் மட்டுமே கொடுப் பார்கள். வாரம் 10 ஆயிரம் வீதம் 10 வாரங் களுக்கு 1 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கட்ட வேண்டும். ஒருவாரம் தாமதித் தாலும் வட்டி இரு மடங்காகும்.

ரன் முதல் ராக்கெட்

வாங்கும் பணத்திற்கு மணிக் கணக்கு போட்டு வாங்கும் வட்டிக்கு பெயர் ரன் வட்டி. 1000 ரூபாய் பணம் வாங்கி விட்டு 

தினம் 100 வீதம் வட்டி கட்டி விட்டு பத்தாவது நாள் முடிவில் 1000 ரூபாய் திருப்பி தருவது ராக்கெட் வட்டி. இது சிறு வியாபாரிகள் அதிகம் இந்த வட்டியில் சிக்கிக் கொள்கி ன்றனர்.

வாரத்திற்கு 2 ஆயிரம்

மாத வட்டி, வார வட்டி, தவணை வட்டி என கந்து வட்டிகள் பல இருந் தாலும் காலத் திற்கு ஏற்ப கம்யூட்டர் வட்டியும் இருக்கிறது. 

அதாவது ஒரு வாரத்திற்கு 10 ஆயிரம் கடன் வாங்கி னால் அதில் 2 ஆயிரம் எடுத்துக் கொண்டு 8 ஆயிரம் கொடுப் பார்கள். 
சற்று முன் மும்பையில் நடந்த சம்பவம் !
ஒரு வாரத்தில் திருப்பி செலுத்தும் போது 10 ஆயிரம் செலுத்த வேண்டும். இது தான் கம்யூட்டர் வட்டி.

வட்டி முதலைகள்

தென் மாவட்டங் களான நெல்லை, தூத்துககுடி, கன்னியா குமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் கடந்த 15 ஆண்டு களாக 

ஏராளமான நிலமோசடி, கந்து வட்டி மூலம் வீடுகள், நிலங்க ளை அபகரிக்கும் சம்பவ ங்கள் நடந்து ள்ளன. 

கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி - சட்டம் என்ன செய்கிறது?
இதன் மூலம் பாதிக்கப் பட்ட மக்களிட மிருந்து 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் டிஜிபி அலுவல கத்தில் குவிந்தன.

சட்டம்

கடன் பெற்றவர் களிடம் மீட்டர் வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, மணி நேர வட்டி, தண்டல் என வட்டிப் பணம் வசூலிப் பவர்களை ஒடுக்கும் விதமாக வும், 
கைபேசி மூலம் உங்கள் வீட்டை கட்டுப்படுத்த !
வட்டிக் கொடுமை யால் பாதிக்கப் படும் மக்களைக் காப்பாற்ற வும் கடந்த 2003ஆம் ஆண்டு, கந்து வட்டி தடுப்புச் சட்ட த்தை 

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்தச் சட்டம் தொடர் பான ஆணை, கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர், 14ஆம் தேதிஅரசிதழில் வெளியிட ப்பட்டது.

ஜெயலலிதா

தமிழ்நாடு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் (Tamilnadu Prohibition of Charging Exorbitant Interest Act), கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அமல் படுத்தப் பட்டது.

அதில் கந்து வட்டி, ரன் வட்டி என்ற பெயரில் கடன் பெற்றவர் களிடம் அதிக பணம் வசூலிப்பது நிரூபிக்கப் பட்டால், 

மூன்றா ண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக் கவும் வழி வகை செய்யப் பட்டுள்ளது.

காவல் துறையினர்
கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி - சட்டம் என்ன செய்கிறது?
வட்டிக்கு பணம் வாங்கி விட்டு வருடம் முழுவதும் தவிக்கும் அப்பாவி மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகி ன்றனர். 

அப்பாவி களை காக்க கந்து வட்டி தடுப்பு சட்டம் மூலம் எதுவும் செய்ய முடிய வில்லை என்பதுதான் சோகம். 

ஜெயலலிதா விற்கு பிறகு சாட்டையை சுழற்றும் சரியான முதல்வர் இல்லாததே அப்பாவி உயிர்கள் பலரின் உயிர் பறிபோக காரண மாக அமைந்து விட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings