தமிழிசையின் ட்வீட்டுக்கு கார்த்திக் நரேன் பதிலடி !

0
நடிகர்களின் சம்பளம் தொடர்பாக தமிழிசை வெளியிட்ட ட்வீட்டிற்கு இயக்குநர் கார்த்திக் நரேன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழிசையின் ட்வீட்டுக்கு கார்த்திக் நரேன் பதிலடி !
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி யிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். 

இதனால் பெரும் சர்ச்சை உருவாகி யுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு ட்வீட்களை வெளியிட்டுள்ளார். 

அதில், மெர்சல் அர்ப்பணிப் போடு வேலை செய்யும் மருத்துவர்களை கேலி பேசுகிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை ஊழல்வாதிகளாகக் காட்டுகிறது. 

மருத்துவர்கள் 5 ரூபாய் கட்டணம் எடுத்துக் கொள்ள வேண்டும் அதே வேளையில் நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவார்களா? என்று பதி விட்டார்.
இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு 'துருவங்கள் 16' இயக்குநர் கார்த்திக் நரேன், தவறு செய்தவர் களுக்குத் தான் வலிக்கும். 

ஏன் சில அரசியல்வாதிகள் நடிகர்களை விட அதிகப் பணம் சம்பாதிக் கிறார்களே. அவர்களை கேட்கலாமே? என்று தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings