விக்கிபீடியாவில் கை வைத்தவர்கள் மீது சட்டம் பாயுமா?

0
தமிழக பாஜக தலைவர்களின் விக்கி பீடியாவில் மர்ம நபர்கள் யாரோ உள் நுழைந்து அவர்களின் பெயர் மற்றும் தொழிலை தவறுதலாக மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
விக்கிபீடியாவில் கை வைத்தவர்கள் மீது சட்டம் பாயுமா?
இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரி கூறியதாவது: மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை சவுந்தர ராஜன், 

மற்றும் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரை சமூக வலை தளங்களில் கொச்சைப் படுத்தி மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

மேலும், தமிழிசை மற்றும் பொன்.ராதா, ராஜா ஆகியோரின் விக்கிபீடியாவில் தவறான தகவலை பதிவிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

இது போன்று தவறு செய்பவர்கள் மீது information technology act 2000ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings