பாட்னா விரைவு ரயில் தடம்புரண்டு 3 பேர் பலி !

0
வாஸ்கோடகாமா பாட்னா விரைவு ரயில் உத்தரப் பிரதேசத்தில் விபத்துக் குள்ளானது. இதில் 3 பேர் பலியாகினர், 9 பேர் காயமடை ந்தனர்.
பாட்னா விரைவு ரயில் தடம்புரண்டு 3 பேர் பலி !
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, "வாஸ்கோடகாமா பாட்னா விரைவு ரயில் இன்று (வெள்ளிக் கிழமை) 

அதிகாலை 4. 14 மணியளவில் உத்தரப் பிரதேசத்தின் சித்ராகுட் மாவட்டத்தில் தடம் புரண்டு விபத்துக் குள்ளானது. இதில் அந்த ரயிலில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் பலியான வர்களில் இருவரது உடல் அடையாளம் காணப் பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பிஹாரைச் சேர்ந்த தந்தை, மகன். 

மேலும் காய மடைந்த 9 பேரும் சித்ராகுட் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்றார். விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகி ன்றனர்.

ரயில்வே அமைச்சர் இரங்கல்
இந்த விபத்து குறித்து மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், விபத்தில் பலியான வர்களுக்கு தனது இரங்கலை தெரிவித் துள்ளார்.

மேலும் வாஸ்கோடகாமா ரயில் விபத்தில் பலியான வர்கள் குடும்பத் துக்கு ரூ.5 லட்சமும், காயமடைந் தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு தொகை யாக அறிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings