ஸ்ரீநகர் தாக்குதல் அமாக் பொறுப்பேற்பு !

0
ஸ்ரீநகரின் புறநகர் ஸாகுரா பகுதியில் நடைபெற்ற தாக்கு தலுக்கு ஐஎஸ் செய்தி நிறுவனம் 'அமாக்' பொறுப் பேற்றுள்ளது.
ஸ்ரீநகர் தாக்குதல் அமாக் பொறுப்பேற்பு !
இது குறித்து சைட் இன்டல் குரூப் எனப்படும் தீவிரவாதிகள் நடத்தும் இணைய தளம் வெளி யிட்டுள்ள செய்தியில், 

ஸ்ரீநகர் அருகே நவம்பர் 17 அன்று நடைபெற்ற ஸாகுரா தாக்குதலுக்கு ஐஎஸ் ஆதரவு செய்தி நிறுவனம் அமாக் பொறுப் பேற்றுள்ளது. 

இத்தாக்குத லில் உள்ளூர் போராளி ஒருவரும் காவல் துணை ஆய்வாளர் ஒருவரும் உயிரிழந் துள்ளனர்'' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

காஷ்மீரின் பாதுகாப்புத் துறைகள் மிர் என்ப வருக்கு சிரியா மற்றும் ஈராக்கி லிருந்து இயக்கப்படும் தீவிரவாத அமைப்பு களோடு தொடர்பு உண்டு என உறுதிப் படுத்தி யுள்ளன. 
காவல் துறையினரின் தகவலின் படி, ஜாகீர் மூசாவின் தலைமையின் கீழ் இயங்கும் தீவிரவாதக் குழுவில் மிர் சேர்க்கப் பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.

இத்தாக்குதல் மூசாவின் குழுவி னரால் முதல் முறையாக நடத்தப் பட்டுள்ளது. 

இவர்களின் அமைப்பான அன்சார் கஸ்வாத் உல் ஹிந்த், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் பிரிவொன்றை தலைமை ஏற்று நடத்து வதாக கூறப் படுகிறது.

இது தொடர்பாக மேற்கொள்ளப் பட்ட நடவடி க்கையில் ஸாகுரா எனப்படும் காஷ்மீரின் புறநகரில் தீவிரவாதி தாசீப் அஹ்மத் கைது செய்யப் பட்டுள்ளார்.

இதற்கிடை யில் டெஹ்ரீக் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் சண்டையின் போது இறந்த மிர் எங்கள் குழுவைச் சேர்ந்த போராளி, 

ஒரு மாவட்டத் தளபதியும் கூட. அன்சார் உல் ஹிந்த் அமைப்பும் அல் கொய்தா அமைப்பும் இணைந் தால் காஷ்மீர் போராட்ட த்தையே உருக்குலைத்து விடும் 
என்பதால் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித் துள்ளதாகக் கூறினார்.

இருப்பினும், நவம்பர் 18-ம் தேதி மிர் இறுதிச் சடங்கில், ஐஎஸ் தீவிரவாதக் குழுக்கள் பயன் படுத்துவதைப் போன்ற கருப்புக் கொடியை பெண்கள் உயர்த்திப் பிடித்து வந்தனர். 

மிர் உடல் மீது அவரது ஆதரவாளர் களால் கருப்புக் கொடி போர்த்தப் பட்டிருந்தது. மிர் ஆதரவா ளர்கள், இஸ்லாமிய சார்பு மற்றும் சுதந்திர சார்புக் கோஷங் களை எழுப்பி வந்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings