ஒரே நாளில் ரூ.100 கோடி வரை விநியோகம் - ஸ்டாலின் | In a single day distribution of Rs. 100 crore - Stalin !

0
இடைத் தேர்தல் நடைபெற உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் நேற்று ஒரே நாளில் அதிமுக மற்றும் தினகரன் தரப்பினர், 


சுமார் ரூ.100 கோடி வரை வாக்காள ர்களுக்கு பணம் விநியோகித் துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டி யுள்ளார். 

சென்னை தலைமை செயலக த்தில் தேர்தல் அதிகாரி களை அரசியல் கட்சியினர் சந்தித்து ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் குறித்து புகார் அளித்தனர். 

திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் தேர்தல் சிறப்பு அலுவலரை சந்தித்து புகார் அளித்தார். 

பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் களுக்கு பணம் விநியோகம் செய்பவ ர்களை பிடித்து 

காவல் துறை யினரிடம் ஒப்படைத் தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப் படுவ தில்லை என குற்றம் சாட்டினார். 

கோடி, கோடியாக பணப் பட்டுவாடா செய்தாலும், ஆர்.கே. நகரில் அதிமுக டெபாசிட்டை இழக்கும் என்றார். 

தேர்தல் அதிகாரி களும்,காவல் துறையும் திட்ட மிட்டு இதற்கு உடந்தை யாக இருக்கி ன்றனர். 

பணப் பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணை யத்தில் புகார் அளித்தால் கண்டும் காணாமல் இருப்ப தாக சாடினார்.

ஆர்.கே. நகரில் நடக்கும் பணப் பட்டுவாடா குறித்து தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவிடம் புகார் மனு அளிக்கப் பட்டதாக கூறினார். 

பணப் பட்டுவாடா செய்யும் வேட்பா ளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றார். 

முதல்வர் பழனிசாமி யின் மேற் பார்வையில் தான் ஆர்.கே.நகர் தொகுதி யில் பணப் பட்டுவாடா நடப்ப தாக ஸ்டாலின் கூறி யுள்ளார். 

பணப் பட்டுவாடா குறித்த ஆதாரங் களை தேர்தல் அதிகாரி யிடம் கொடுத்து ள்ளதாகவும், சுமார் 20 புகார்கள் வழங்கப் பட்டுள்ள தாகவும் கூறினார். 

ஆதாரங் களின் அடிப்படை யில் தேர்தல் ஆணையம் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டு்ம் என்றும் வலியுறுத்தி யுள்ளார். 

மேலும் பேசிய ஸ்டாலின், அப்பல்லோ வில் ஜெயலலிதா கவலைக் கிடமான நிலையில் தான் அனுமதி க்கப்பட்ட தாக அதன் தலைவர் பிரதாப் ரெட்டி கூ றியுள்ளார். 

எனவே ஜெயலலிதா மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி தற்போதைய துணை முதல்வர் OPS தான். 

ஏனெனில் அவர் தான் அப்போது தமிழக முதல்வ ராக இருந்தார் என குறிப்பிட் டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings