வாஷிங்டனில் ரயில் தடம் புரண்டு 6 பேர் பலி !

0
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 6 பேர் பலியாகி யுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
வாஷிங்டனில் ரயில் தடம் புரண்டு 6 பேர் பலி !
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட் பகுதியிலிருந்து போட்ர்லாண்ட் பகுதிக்கு நேற்று ஆம்ட்ராக் (AMTRACK) ரயில் சென்று கொண்டி ருந்தது. 

ரயிலில் 75 பயணிகள் மற்றும் 5 ஊழியர் களும் பயணம் செய்தனர். பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விழுந்தன. 

இதனால் அங்கு கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் போக்கு வரத்து நெரிசலை சீர்செய்து, விபத்தில் சிக்கிய வர்களை மீட்டனர். 
இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ள தாகவும், பலர் படுகாய டைந்துள்ள தாகவும் போலீஸார் தெரிவித் துள்ளனர்.

மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்ட பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ள தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings