நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு !

0
ஜெயலலிதா மரணம் அடைந்த தால் காலியான ஆர்.கே. நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு !
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட் பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். 

அன்று மாலை வரை 30 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்தி ருந்தனர். இந்த நிலையில் கடைசி நாளான நேற்று 

மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடும் என்று எதிர் பார்க்கப் பட்டது. நேற்று மட்டும் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டது. 

அதுவும் சுயேட்சை வேட் பாளர்கள் விதம், விதமாக வந்து தேர்தல் அலுவலக அதிகாரி களை திணற வைத்து விட்டனர். 

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. 
முதலில் அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பா ளர்கள் மனுக்கள் பரிசீலனை க்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி. தினகரன் ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. 

அதிமுக வேட்பாளர் மதுசூதன னின் படிவம் B-ல் ஒருங் கிணைப்பாளர் பன்னீர் செல்வம் 

மற்றும் இணை ஒருங் கிணைப்பாளர் பழனிசாமி கையெழுத் திட்டுள்ள தாக தகவல்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக் கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்பு மனுக்கள் ஏற்கபட்டது. 

விஷால் வேட்பு  மனுவில் உறுதி மொழி, கணக்கு விவரங்கள் முறை யாக இல்லை என குற்றச் சாட்டு எழுந்தது 
இதனால் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை ஏற்க அ.தி.மு.க வும் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன. 

இதை தொடர்ந்து அவரது மனு மீதான பரிசீலனை யில் இழுபறி நீடித்தது.

இந்த நிலையில் ஜெ. தீபா வேட்புமனு நிராகரிப்பு: படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாத தால் ஜெ. தீபாவின் வேட்பு மனுவை, 

தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்பட வில்லை என தெரியவந்து உள்ளது.

காலையில் இருந்து நடிகர் விஷாலின் வேட்பு மனு தொடர் பாகவும் இழுபறி நீடித்து வந்தது. 
இதை தொடர்ந்து மாலை நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுசாமி நிராகரித்தார். 

விஷாலை முன்மொழிந் தவர்கள் விவரம் சரியாக மனுவில் குறிப்பிடபட வில்லை. 10 பேர் முன் மொழிய வேண்டும், 

ஆனால் முன் மொழியா தவர்கள் 2 பேரின் பேர் அந்த மனுவில் இடம் பெற்று இருந்த தாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அவரது மனு நிராகரிக்க பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings