பில்லி, சூனியம், வசியம் பலிக்குமா? படியுங்கள் !

பில்லி, சூனியம், வசியம் எல்லாம் இன்னும் இருக்கிறதா என்ன? என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால். நீங்கள் கேரளாவில் சிறிய சுற்று பயணம் மேற்கொண்டு வந்தால் நன்கு அறியலாம்.
பில்லி, சூனியம், வசியம் பலிக்குமா?
இன்னும், ஒரு சில இடங்களில் சூனியம் செய்வதும், வைப்பது, எடுப்பது எல்லாம் பட்டப் பகலில் நாம் அங்கே காண முடியும். 

இதில், பில்லி, சூனியம், வசியம், மனோ வசியம் என பல வகைகள் இருக் கின்றன.

எதை எதை, எதற்கெல் லாம் செய்கிறார்கள். யாருக்கு எல்லாம் இந்த தாக்கம் ஏற்படாது என அவர்கள் கூறும் சில தகவல்கள்

எதிரி!

ஒருவர், தனக்கு பிடிக்காத நபர் அல்லது விரோதி களுக்கு, வாழ்வில் தோல்வி அடைய வேண்டும், 

நஷ்டம் அடைய வேண்டும், துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற் காக செய்வது பில்லி, சூனியம்.

மூளை கட்டு!

ஒரு நபரின் மூளையை மட்டும் கட்டுப் படுத்தி, குழப்பி, நம் பேச்சை மட்டும் கேட்டு, தலை யாட்டி பொம்மை போல இயங்கு வதற்கு செய்வது பில்லியாம்.

வசியம்!
வசியம்
ஆண், அல்லது பெண்ணை முழுவது மாக தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு செய்யப் படுவது வசியம் என கூறப்படு கிறது.

சூனியம்!

ஒரு நபரை அளிக்க வேண்டும் என்றால் அதற்கு சூனியம் வைக்கி றார்கள். அதற்கு அந்த நபரின் துணி, காலடி மண் போன்ற வற்றை பயன் படுத்து கின்றனர்.

மாந்திரீகம்!
மாந்திரீகம்
தோல்வி, நஷ்டம், துன்பம், அழிவு என ஒருவருக்கு எல்லா வகையி லும் தீங்கு ஏற்படுத்த மாந்திரீகம் செய்கி றார்கள். இதற்கான சிறப்பு பூஜைகள் செய்து வசியம் செய்யும் நபருக்கு அளிக் கிறார்கள்.

மாந்திரீகம் செய்யப் பட்ட பொருளை, அந்த நபர் வாழும் வீட்டில் அல்லது அலுவல கத்தில் மறைத்து வைத்து விடுவார் களாம்.

இன்டர்நெட் வசியம்!

வசியம் செய்ய நினைக்கும் நபரை, இன்டர்நெட் மூலமாக கூடி பேசி மனோவசியம் செய்யலாம் என ஒரு பிரிட்டிஷ் வசிய நிபுணர் கூறுகிறார்.

சந்திரன்!

எந்த ஒரு நபரின் ஜாதகத்தில் சந்திரன் பலம் இல்லா நிலையில் இருக்கிறதோ, அவர்களை தான் வசியம் செய்ய முடியுமாம். சந்திரன் பலமாக இருந்தாம் வசியல் செய்ய முடி யாதாம்.

யார், யாருக்கு?
குல தெய்வம்!
வேதம் ஓதுபவர்கள், சாமியார்கள், குருக்கள் போன்ற வர்கள் மத்தியில் மாந்திரீகம் பலன் அளிக்கா தாம். 

அதே போல தினமும் யோகா, தியானம் செய்யும் நபர்கள் மத்தியில் மனோவசியம் பலன் தராதாம்.

குல தெய்வம்!

குல தெய்வங்களை வணங்கி வரும் நபர்கள் மத்தியில் மாந்திரீகம் எந்த தாக்கத்தையும் உண்டாக்காது என்றும் மாந்திரீக செயல்களில் ஈடுபடு பவர்கள் கூறுகி ன்றனர். 

அதே போல, மனதை ஒரு நிலைப் படுத்த தெரிந்த யாரிடமும் மனோவசியம் வேலை செய்யாது என கூறு கின்றனர்.
Tags:
Privacy and cookie settings