ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஷால் போட்டி - அதிகாரபூர்வ அறிவிப்பு |

0
ஆர்.கே. நகரில் நடைபெற வுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட வுள்ளதாக நடிகர் விஷால் அதிகார பூர்வமாக அறிவித் துள்ளார். 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதி யில், டிசம்பர் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்தத் தேர்தலுக் கான வேட்புமனுத் தாக்கல், நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது. 

இந்தத் தொகுதியில் தி.மு.க சார்பில் மருது கணேஷூம் அ.தி.மு.க சார்பில் மதுசூதண னும் டி.டி.வி. தினகரன் சுயேச்சை யாகவும் களமிறங்க வுள்ளனர். 

மேலும், பா.ஜ.க சார்பில் கரு. நாகராஜன் போட்டி யிடுவார் என்று தகவல்கள் வெளி வந்துள்ளன.

இந்நிலை யில், நடிகர் விஷாலும் இடைத் தேர்தலில் சுயேச்சை யாகப் போட்டியிட உள்ளார்

என்று அவர் தரப்பி லிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி யுள்ளது. 

அவருடைய நண்பர் களுடன் தீவிரமாக ஆலோசித்த பின்பு விஷால் இந்த முடிவை எடுத்து ள்ளார் என்று தெரிகிறது. 

திங்கள் கிழமை, அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வுள்ளார். 

அவர், ஏற்கெனவே நடிகர் சங்கச் செயலாள ராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவ ராகவும் இருந்து வருகிறார். 

சமீப காலமாக அரசியல் தொடர்பான கருத்து களை விஷால் தைரியா மாகத் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அரசியில் இறங்கி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings