காதலிக்க மறுத்ததால் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி | Trying to force the student to refuse to love !

0
பயிற்சி வகுப்புக்கு சென்ற மருத்துவ மாணவியை, பயிற்சி கல்லூரி க்குள் பட்டப் பகலில் புகுந்து 


அவரை காரில் கடத்தி வலுக்கட்டா யமாக பாலியல் வன்கொடுமை செய்த பொறியியல் கல்லூரி மாணவன் மற்றும் அவனது நண்பனை போலீசார் கைது செய் துள்ளனர். 

சென்னை முகப்பேர் கிழக்கு பன்னீர் நகரை சேர்ந்தவர் வித்யா (18) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் சார்ஜாவில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். 

வித்யாவு க்கு கடந்த பிப்ரவரி மாதம் முகநூல் மூலம், வடபழனி அழகிரி நகர், மெயின் ரோட்டை சேர்ந்த பிரவீன் குமார் என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினி யரிங் படித்து வருகிறார்.

இருவரும் முகநூலில் தினமும் குறுஞ்செய்தி அனுப்பியும், வீடியோ கால் மூலமும் பேசி வந்தனர். 

நாளடை வில் இருவ ருக்கும் நெருக்கம் ஏற்பட்ட தால், ஒருவருக் கெருவர் தனது செல்போன் எண்ணை பரிமாறி கொண்டு  வாட்ஸ்அப்பில் பேசி வந்தனர். 

பின்னர், தினமும் தொலைபேசி மூலமும் பேசி வந்து ள்ளனர். இந்நிலையில், சில மாதங் களுக்கு முன் தனது தாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட தால், 

அவரை பார்க்க வித்யா சென்னை வந்துள்ளார். அப்போது, பிரவீன் குமார் வித்யாவை சந்தித்து பேசியுள்ளார். 

சில நாட்களுக்கு பின் வித்யா மீண்டும் சார்ஜா சென் றுள்ளார். பின்னர் அங்கிருந் தபடியே வித்யா பிரவீன் குமாருடன் பேசி வந்துள்ளார்.

இதற்கிடையில் பிரவீன் குமாரின் நடவடி க்கையில் வித்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிரவீன் குமாரிடம் பேசுவதை வித்யா நிறுத்தி உள்ளார். 

இது குறித்து பிரவீன்குமார் வித்யாவிடம் கேட்டுள்ளார். அப்போது அவர், ‘‘உனது நடவடிக்கை சரியில்லை. 

அதனால் என்னிடம் பேசாதே’’ என பிரவீன் குமாரிடம் கூறியுள்ளார்.  இதனால், ஆத்திர மடைந்த பிரவீன்குமார், 

தினமும் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும், ஆபாச படங்களை அனுப்பியும் தொந்தரவு செய்து ள்ளார்.

ஒரு கட்டத்தில் பிரவீன் குமாரின் தொல்லை தாங்க முடியாமல், அவனது நம்பரை வித்யா முடக்கி வைத் துள்ளார். இருப்பினும் முகநூலில் பிரவீன் குமார் டார்ச்சர் செய்து மிரட்டி யுள்ளார். 

இதனால், பயந்து போன வித்யா செல்போன் எண்ணை மாற்ற முடியாமலும், முகநூலில் அவனை முடக்க முடியா மலும் தவித்து வந்துள்ளார்.

இந்நிலை யில், வித்யா வின் தாய்க்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. 

இதனால், கல்லூரியில் விடுமுறை எடுத்து கொண்டு வித்யா கடந்த சில வாரங் களுக்கு முன் சென்னை வந்துள்ளார். 

இந்த தகவல் பிரவீன் குமாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால், அவன் மீண்டும் வித்யாவை தொலைபேசி மூலம் டார்ச்சர் செய்துள்ளார்.

சென்னை வந்துள்ள வித்யா தனது படிப்பு தொடர்பாக திருமங் கலத்தில் உள்ள ஒரு பயிற்சி கல்லூரி யில் சேர்ந்து 

தினமும் வகுப்புக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வித்யா பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார்.

மதியம் 1.30 மணி அளவில் வித்யாவின் செல் போனுக்கு பிரவீன் குமார் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி யுள்ளார். 

அதில், ‘‘உடனே நீ வெளியே வர வேண்டும். நான் வெளியே நிற்கிறேன். 

இல்லை யென்றால் நான் உள்ளே வருவேன்’’ என்று அனுப்பி யிருந்தார். ஆனால் வித்யா வர வில்லை.

இதனால், பிரவீன் குமார் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பினர். வெகு நேரமாகி யும் வித்யா வராததால் ஆத்திர மடைந்த பிரவீன்குமார், 

பயிற்சி கல்லூ ரியில் அதிரடி யாக புகுந்து வித்யாவை வலுக் கட்டயமாக வெளியே இழுத்து வந்தார். 

அங்கு காரில் தயாராக நின்றிருந்த அவனது நண்ப ருடன் வித்யாவை காரில் கடத்தி சென்றார்.

பின்னர், அந்த நண்பன் வீட்டில் வைத்து வித்யாவை தன்னை காதலிக்கும்படி பிரவீன் குமார் சரமாரி யாக தாக்கி உள்ளார். 

இதில், வித்யாவின் முகத்தில் ஆங்காங்கே வீங்கி காயம் ஏற்பட்டது. 

பின்னர் பிரவீன் குமார் வித்யாவை படுக்கை அறைக்கு அழைத்து வலுக்கட்டா யமாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

அப்போது வித்யா சத்தம் போட்ட தால் அவருக்கு கொலை மிரட்ட லும் பிரவீன் குமார் விடுத் துள்ளார். 

பின்னர், மாலை அதே காரில் வித்யாவை அழைத்து அவரது வீட்டு வாசலில் இறக்கி விட்டு இருவரும் சென்று விட்டனர்.

வீட்டிற்கு வந்த வித்யா மிகவும் சோர்வுட னும், யாரிடமும் பேசாமல் இருந்து ள்ளார். இதனால் சந்தேகப்பட்டு அவரது தாய் கேட்டுள்ளார். 

அதற்கு வித்யா, ‘‘எதுவும் இல்லை. சாலையில் நடந்து வரும் போது ஆட்டோ இடித்த தால் கீழே விழுந்து விட்டேன்’’ என கூறி யுள்ளார்.

ஆனால், வித்யா வின் முகத்தில் காயங்கள் இருந்த தால் அவரது தாய் சந்தேகப் பட்டு மீண்டும் கேட்டுள்ளார். 

அப்போது வித்யா நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி யடைந்து வித்யாவை சிகிச்சை க்காக 

தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து விட்டு, முகப்பேர் காவல் நிலைய த்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரவீன் குமார் மற்றும் அவனுக்கு உதவிய அண்ணாநகர் டபிள்யூ பிளாக்கை சேர்ந்த சுரேந்தர் என்ப வரையும் கைது செய்து விசாரி த்தனர். 

அதில், இருவரும் வித்யாவை காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டனர். 

இதை யடுத்து, இதேபோல் இருவரும் வேறு பெண்ணை துன்புறுத்தி உள்ளார் களா என அவர்க ளிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகி ன்றனர்.

முகநூல் நட்பால் தொடரும் விபரீதம்

முகநூல் மூலம் முதலில் நட்பாக பழகும் இருவரும் ஒரு கட்டத் தில் காதலிக் கின்றனர். 

பின்னர், காதலன் நடவடி க்கையில் சந்தேகம் ஏற்பட்டும், அவனை பற்றி பல தகவல்கள் தெரிய வந்ததும் பேச மறுக்கி ன்றனர்.

இதனால், ஆத்திர மடைந்து அவர்கள் காதலியை வலுக்கட்டா யமாக கடத்தி செல்வதும், பலாத்காரம் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. 

முகநூலில் ஆடம் பரமான படங்கள் மற்றும் அழகான தோற்றத்தை பார்த்து மயங்கும் பெண்கள், 

அவர்களின் நடவடி க்கைகள் தெரிந்த பின் விலகுவதே இது போன்ற விபரீத சம்பவங் களுக்கு காரண மாக அமைகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings