கந்து வட்டியால் பெண் விஷம் குடித்து தற்கொலை !

0
திண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது கணவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கந்து வட்டியால் பெண் விஷம் குடித்து தற்கொலை !
மதுரை காமராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கேசவன்(60). இவர் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி காயத்ரி(55). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

கடந்த சில நாட்களாக கேசவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.  எனவே குடும்பத்தை சமாளிக்க கந்து வட்டிக்கு கடன் வாங்கி யிருந்தார். கடன் கொடுத்த வர்கள் கேசவனை நெருக்கிய தால், அவர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இது குறித்து தனது மனைவி காயத்ரியிடம் அவர் தெரிவித் துள்ளார். இதனை யடுத்து நானும் உங்களுடன் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று காயத்ரி கூறி யுள்ளார். 

அதன்படி கணவன்-மனைவி 2 பேரும் மதுரையில் இருந்து ரயில் மூலம் திண்டுக்கல் அருகே உள்ள கொடைரோடு வந்துள்ளனர். 

சுதந்திராபுரம் என்ற பகுதியில் ஒரு கடை முன்பு நின்று, காயத்ரி ஏற்கனவே வாங்கி வைத் திருந்த வி‌ஷத்தை குடித்தார். கேசவன் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். 

இதனை கண்ட பொது மக்கள், உடனடி யாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து ள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், காயத்ரியை மீட்ட போது அவர் இறந்தி ருப்பது தெரிய வந்தது.
கேசவன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார். இதனை யடுத்து உடனடி யாக திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை யளிக்கப் பட்டு வருகிறது. 

கேசவன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி யுள்ளனர். அந்த கடிதத்தில் எங்களது சாவுக்கு கோபி, இளங்கோவன் ஆகியோர் தான் காரணம். இவர்களிடம் கடன் வாங்கி யிருந்தேன். 

நான் வட்டி கட்டியே ஓய்ந்து விட்டேன். எனவே மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதப்பட் டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings