சசிகலா புஷ்பா திருமணம் பற்றி லிங்கேஸ்வரன் !

0
சசிகலா புஷ்பா என்றாலே அதிரடிப் பேச்சுக்கும், சர்ச்சை களுக்கும் பஞ்சமிருக் காது. அந்த வகையில், அவருக்கு வரும் 26-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக 
சசிகலா புஷ்பா திருமணம் பற்றி லிங்கேஸ்வரன் !
அழைப்பிதழ் ஒன்று சமூக வலை தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்தத் தகவல் பற்றி அவர் இது வரை உறுதி செய்யவில்லை.

சசிகலா புஷ்பா எம்பி

தூத்துக்குடி மேயராக இருந்த சசிகலா புஷ்பா, கடந்த 2016-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் மாநிலங் களவை உறுப்பி னராகத் தேர்வு செய்யப் பட்டார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க பொதுச் செயலாளரு மான ஜெயலலிதா தன்னை அடித்து துன்புறுத்தியாகப் பகிரங்க குற்றச் சாட்டை மாநிலங் களவையில் எழுப்பி நாடாளு மன்றத்தை அதிர வைத்தார். 

அது மட்டுமன்றி, பதவியை ராஜினாமா செய்யும்படி ஜெயலலிதா வும் அவருடைய தோழி சசிகலாவும் கூறுவதாக வும், எனவே தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் நாடாளு மன்றத்தில் கதறி அழுதார். 

அவருடைய இந்தப் பேச்சு அரசியல் களத்தில் அனல் வீசியது. இதை யடுத்து, அவருக்கு ஆதரவா கவும், எதிராகவும் அரசியல் விமர்சகர்கள் பலரும் தங்களது கருத்து களை அப்போது வெளியிட்டி ருந்தனர். 

அதில், 'ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசியவர்கள் இல்லை என்ற பிம்பத்தை உடைத்தார் சசிகலா புஷ்பா' என்பது தான் ஹைலைட்.
அந்த விவகாரம் ஓய்வதற்குள், தி.மு.க மாநிலங் களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருப்பது போன்ற புகைப் படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

அதே போல், அவரை டெல்லி விமான நிலையத்தில், சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த தாகவும் புகார் எழுந்தது. 

இப்படியான தொடர் சர்ச்சை களுடனே இருந்தவர் மீது, அவருடைய வீட்டில் வேலை செய்த பெண் தன்னைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார் கொடுத்தார்.

சசிகலா புஷ்பா-வின் கணவர் லிங்கேஸ்வரா

இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் பொதுக் குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு கூடிய போது, 

சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரா பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா போட்டியிடப் போவதாகக் கூறி அ.தி.மு.க தலைமை அலுவலக த்துக்கு மனுத்தாக்கல் செய்ய வந்தார். 

அப்போது அந்தக் கட்சியில் உள்ள நிர்வாகி களுக்கும், சசிகலா புஷ்பா வின் கணவரு க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 
தகராறு முற்றியதில் அவருடைய கணவர் தாக்கப் பட்டார். இது தொடர்பாக காவல் நிலையத் திலும் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த விவகாரத் துக்குப் பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங் களிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சசிகலா புஷ்பா. 

இந்த நிலையில் தான் அவருக்கும் டெல்லியைச் சேர்ந்த ராமசாமி என்பவரு க்கும் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அவர்களுடைய பெயர்கள் இடம்பெற்ற திருமண அழைப் பிதழும் சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

டெல்லியில் வரும் 26-ம் தேதி ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா மணக்கப் போவதாக அந்த அழைப் பிதழில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

மாப்பிள்ளை யான ராமசாமி ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக உள்ள தாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் அவர், நாடாளு மன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதா வும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சசிகலா புஷ்பா - ராமசாமி திருமண வரவேற்பு என்று குறிப்பிடப் பட்டிருந்த இடத்தில், நிகில் மற்றும் ஹரி ஆகிய பெயர்கள் இடம் பெற்றிருக் கிறது. 

அதில், நிகில் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, "சசிகலா புஷ்பாவிடம் தான் பணியாற்று கிறேன். 

திருமண அழைப்பிதழ் பற்றியோ அவர்களுடைய திருமண விவரம் பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது'' என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்துக் கொண்டார். 

போதிய விவரங்கள் கிடைக்காத நிலையில் நிகிலையும், ஹரியையும் தொடர்பு கொள்ள முயற் சித்தும், அவர்களிடம் தொடர்ந்து பேச முடிய வில்லை.

சசிகலா புஷ்திபா திருமண அழைப்பிதழ்

இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா மற்றும் அவருடைய கணவர் லிங்கேஸ்வரா இருவரை யும் 

தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் இருவருடைய தொலைபேசி எண்களும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது.
சசிகலா புஷ்பா திருமணம் பற்றி லிங்கேஸ்வரன் !
இந்த நிலையில், சசிகலா மற்றும் ராமசாமி திருமணம் குறித்து டெல்லி நிருப ர்களைத் தொடர்பு கொண்டு பேசிய போது ”இருவருக்கு மான நட்பு உண்மை தான். 

ஆனால் அந்த நட்பு, திருமணம் வரை சென்றிருப்பது ஆச்சர்ய மளிக்கிறது. ராமசாமி யின் மனைவி விபத்து ஒன்றில் இறந்து விட்டார். 

வழக்கு விவகாரங் களில் சசிகலா புஷ்பாவுக்கு உறுதுணை யாக இருந்தார். இந்த நிலையில் தான் அந்த அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. 

அவர்களுடைய அந்த திருமணத்தை உறுதி செய்ய இங்குள்ள நிருபர்களும் ராமசாமி தரப்பைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகி றார்கள்" என்றார்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரனை தொடர்பு கொண்டு, ``சசிகலா புஷ்பாவைத் தொடர்பு கொள்ள முடிய வில்லையே? 

அவரிடம், நீங்கள் பேசினால் நாங்கள் கேட்டதாய்ச் சொல்ல முடியுமா'' என்று வினவினோம். அதற்கு அவர், ``சசிகலா புஷ்பா எங்கு போகிறார்... என்ன செய்கிறார் என்று எனக்கும் தெரியாது. 
இருப்பினும், அவரைத் தொடர்பு கொண்டு நான் பேசினால் நீங்கள் பேசிய தாகத் தெரிவிக் கிறேன்'' என்று சொன்னபடி அழைப்பைத் துண்டித்தார் சற்றே கோபத்துடன்.

திருமணம் விஷயம் பற்றி மெளனம் கலைப்பாரா சசிகலா புஷ்பா?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings