குண்டர் சட்டம் பற்றி தெரிந்து கொள்ள !

1 minute read
தொடர் குற்றங் களில் ஈடுபடக் கூடிய வர்கள், வனக்குற்றங் களில் ஈடுபடக் கூடியவர்கள், கள்ளச் சாராயம், போதைப் பொருள் கடத்தல் 

குண்டர் சட்டம் பற்றி தெரிந்து கொள்ள !
மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதி களை கைது செய்து அதன் மூலம் அமைதியை நிலை நாட்டுவதற்கு என்றுக் கூறி 1982-இல் தமிழக அரசால் இயற்றப் பட்டது குண்டர் தடுப்புச் சட்டம் எனப்படும் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம்.
தமிழகத் தில் நிகழும் தொடர் குற்றங் களை தடுக்கும் பொருட்டு குற்றச்சம் பவங்களில் ஈடு படுபவரை முன்னெச் சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்யும் அதிகாரம் இச்சட்ட த்தின் மூலம் வழங்கப் பட்டுள்ளது. 

இச்சட்ட த்தின் கீழ் கைது செய்யப் படக் கூடியவர் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப் படுவார்.



குண்டர் சட்டத்தில் கைது செய்யப் படுவருக்கு எவ்வித நீதிமன்ற விசாரணையு மில்லை என்பதால், கைது செய்யப் பட்டவர் தனது கைது நடவடிக்கை க்கு எதிராக, ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுப் பெற்ற நீதிபதி மற்றும் 

ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட நிர்வாக விசாரணைக் குழு மட்டுமே அணுக முடியும். 
கைதுக்கு எதிரான முறையீடு நிர்வாக விசாரணைக் குழுவால் தள்ளுபடி செய்யப் பட்டால் பின்னர் உயர்நீதி மன்றத்தை அணுகலாம்.
திருட்டு வீடியோ, சி.டி குற்றம் ஆகியவை 2004ம் ஆண்டும், மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு ஆகியவை 2006ம் ஆண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. 

பின்னர், மேற்கொள்ளப் பட்ட இரண்டு திருத்தங் களில் தொடர் குற்றவாளி என்ற வரையறை நீக்கப் பட்டதுடன், சமூக அமைதிக்கு குந்தகம் விளை விப்பதாகக் கூறி கைது செய்யும் வாய்ப்பையும் வழங்கு கிறது.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings