பாம்பு கடித்த பெண்ணிற்கு விநோத வைத்தியம்? பலியான சோகம் !

1 minute read
பாம்பு கடித்த பெண் உடலில் இருந்து விஷம் நீங்க மாட்டுச் சாணத்தில் புதைக்கப் பட்டதில் மூச்சுத் திணறி பரிதாப மாக இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
பாம்பு கடித்த பெண்ணிற்கு விநோத வைத்தியம்? பலியான சோகம் !
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹரை சேந்தவர் தேவேந்திரி (35). காட்டில் விறகு சேகரிக்கச் சென்ற போது அவரை பாம்பு கடித்துள்ளது.

அவருடன் காட்டு க்குச் சென்ற பெண்கள் அவரை காப்பாற்றி கிராமத்து க்கு தூக்கி வந்துள்ளனர். 

அவர் கணவர் முகேஷ் கிராமத்து வைத்தியரை சிகிச்சை க்கு அழைத்து வந்துள்ளார்.

வைத்தியர் வீட்டின் தொழு வத்துக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்றார். தேவேந் திரியை படுக்க வைத்து அவர் உடல் முழுவதும் சாணம் பூசி யுள்ளார். 

பாம்பு கடித்த பெண்ணிற்கு விநோத வைத்தியம்? பலியான சோகம் !
இப்படிச் செய்வ தால் பாம்பு விஷம் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. இந்த மூட நம்பிக்கை யால் அப்பெண் மூச்சுத்திணறி இறந்துள்ளார். இச்சம்பவம் அக்கிராம மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Today | 22, March 2025
Privacy and cookie settings