எல்.ஐ.சி.க்கு நிறுவன வேனை மறித்து ரூ.52 லட்சம் கொள்ளை !

0 minute read
0
பீகார் மாநிலம் தாஸ்புர் சாலையில் எல்.ஐ.சி. நிறுவன வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. 
அந்த வேனில் எல்.ஐ.சி.க்கு சொந்தமான ரூ.52 லட்சம் இருந்தது. பணத்துடன் சென்ற அந்த வேனுக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் சென்றார்.

தாஸ்பூர் சாலையில் வேன் சென்ற போது ஆயுதங் களுடன் வந்த 4 கொள்ளை யர்கள் 

துப்பாக்கி முனையில் வேனை வழிமறித்து பணத்தை கொள்ளை யடிக்க முயன்றனர். 


அப்போது வேனில் இருந்த பாதுகாவலர் கொள்ளையை தடுக்க முயன்றார். 

இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளை யர்கள் துப்பாக்கியால் பாதுகாவலரை சுட்டுக் கொன்றனர். 

பின்னர் அவர்கள் வேனில் இருந்த ரூ.52 லட்சத்தை கொள்ளை யடித்து விட்டு தப்பி சென்றனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் உயர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

தப்பி ஓடிய கொள்ளையர் களை பிடிக்க போலீஸ் படை முடுக்கி விடப்பட்டு உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings