கோயில் மேற் கூரை இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயம் !

1 minute read
0
வண்டலூர் அடுத்த வேங்கட மங்கலம் பகுதியில் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், பூஜாரி உட்பட 9 பேர் காய மடைந்துள்ளனர். 


காஞ்சிபுரம் மாவட்டம், வேங்கட மங்கலத்தில் உள்ளது, திருவேங்கட பெருமாள் கோயில். 

இங்கு தான் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில், 

இரண்டு வருடங்களுக்கு முன்பாக குடமுழுக்கு நடத்தப்பட்டு, புனரமைக்கப் பட்டது. 

இன்று காலை, வழக்கம் போல பக்தர்கள் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர். 

சனிக்கிழமை என்பதால் கோயிலில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. 

கோயில் பூஜாரி வரதராஜன் சாமிக்கு தீபாராதனை காட்டி விட்டு வெளியே வந்த போது திடீரென மண்டபத்தின் மேற்கூரை திடீரென,

அப்படியே பக்தர்கள் நின்ற பகுதி மீது விழுந்தது. இதில், பூசாரி வரதராஜன், 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

பூஜாரி மேல் சிகிச்சைக் காக சென்னை குரோம் பேட்டையி லுள்ள மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளார். 

கதிர்வேலு, ரஞ்சனா, தன்ஷிகா ஆகிய மூன்று குழந்தைகள் உட்பட காயமடைந்த பிறரு, 

அருகே உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர். 


குடமுழுக்கு நடைபெற்ற பிறகு, கோயிலில் நடைபெற்ற 2வது அசம்பாவித சம்பவம் இதுவாகும். 

கடந்த வருடம், துலாபாரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில், ஒரு குழந்தை பலியான நிலையில், 

இப்போது மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது அப்பகுதி யினரிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings