உலகம் முழுவதும் சமீப காலமாக அதிக அளவில் மனிதர்களைத் தாக்கும் நோய் ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) என்ற எலும்பு மெலிதல் நோய்.
எலும்பு மெலிதல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, வருடந்தோறும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ‘உலக எலும்பு மெலிதல் நோய்’ தினமாக அனுசரிக்க படுகிறது.
இந்தியாவில் 50 வயதை கடந்த பெண்களில் 50% பேருக்கு ஆஸ்டியோ போரோசிஸ் நோய் உள்ளது. 30 வயதை கடந்த பெண்களில் 4ல் ஒருவருக்கு உள்ளது.
எனினும் மாறி வரும் வாழ்க்கை சூழல் காரணமாக இன்னும் 10 ஆண்டுகளில் ஆண்களும் இந்த நோயால் பாதிக்கப் படக்கூடும் என அறிவித்தி ருக்கிறது ஐநா.
இந்நிலையில், எலும்பு மெலிதல் நோய் யாருக்கெல்லாம் வரும்? வராமல் தடுக்க என்ன வழி என்பது போன்ற சந்தேகங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
எதனால் வருகிறது?
எலும்பின் உறுதித் தன்மை குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.
எப்படி அறியாலாம்?
எலும்பின் அடர்த்தித் தன்மை அறிவதற்கு என ‘டெக்சா’ என்றொரு மருத்துவ பரிசோதனை இருக்கிறது.
பத்தரை மாற்று தங்கம் என்றால் என்ன? தெரியுமா? உங்களுக்கு !
டெக்சா பரிசோதனை முடிவில் ஒருவரின் எலும்பின் அடர்த்தித் தன்மை எவ்வளவு, வருங்காலத்தில் அவருக்கு ஆடியோ போரோசிஸ் நோய் வருமா எனக் கண்டறிய முடியும்.