குடும்பம் நடத்த மறுத்த சுமதி - இருவரையும் கொன்று தற்கொலை செய்த பாபு !

1 minute read
0
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் 
மாமியாரைக் கொலை செய்து விட்டு தச்சு தொழிலாளி தானும் தற்கொலை செய்து கொண்டார்.

பொள்ளாச்சி கோட்டூர் ரோடு CTC காலனியில் சுமதி என்பவருக்கும், தச்சுத் தொழிலாளியான பாபு 

என்பவரு க்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

தகராறு

இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த சுமதி, தாய் விசாலாட்சியுடன் வசித்து வந்தார். 


பாபு அடிக்கடி சுமதியின் வீட்டுக்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு சுமதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப் படுகிறது.

கொடூரம்

இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்ற பாபு, சுமதி 

மற்றும் அவரது தாயார் விசாலாட்சியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

தற்கொலை

மேலும் அந்த வீட்டிலேயே பாபு கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
தகவல் அறிந்து வந்த போலீஸார் சடலங்களை பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

பரபரப்பு


மேலும் கொலை மற்றும் தற்கொலை குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

குடும்பம் நடத்த மனைவியை அழைத்த நிலையில் அதற்கு ஆதரவளிக்காத மாமியாரையும் சேர்த்து 

கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings