கொலை செய்த டயர்ட்ல டீ போட்டு குடிச்சோம் - கொலையாளி வாக்குமூலம் !

1 minute read
0
புதுவையில் நேற்று நடைபெற்ற கொடூர கொலை சம்பவத்தில் பிடிபட்ட கொள்ளை யர்கள் அதிர வைக்கும் விதமாக வாக்கு மூலம் அளித்துள்ளனர்.


புதுவை நெல்லித் தோப்பு பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பாலகிருஷ்ணன் (72). இவரது மனைவி ஹேமலதா (65). 

இவர்களது இரு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இருவரும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப் பட்டனர். 

பணம், நகைக்காக இருவரும் கொல்லப் பட்டனர். இச்சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.

இதுகுறித்து விசாரிக்க போலீஸார் பல்வேறு தனிப் படைகளை அமைத்து விசாரித்து வந்தனர். 


விசாரணை யில் பாலக் கிருஷ்ணனின் கார் டிரைவரே இந்த கொலையை அரங்கேற்றியது தெரிய வந்தது.

இதனை யடுத்து அவனை பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. 

வக்கீல் வசதியானவர் என்பதால் என் நண்பருடன் அவர் வீட்டில் நுழைந்து இருவரையும் கொலை செய்தோம். 

கஷ்டப்பட்டு கொலை செய்தது மிகவும் கலைப்பாக இருந்தது. இதனால் கிட்சனுக் குள் சென்று இருவரும் டீ போட்டு குடித்தோம். 


பின்னர் அங்கேயே சிறுநீர் கழித்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளான். 

போலீஸார் அவனிடம் தொடர்ச்சி யாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings