மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ள புதிய 20 ரூபாய் நோட்டு !

1 minute read
0
புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது. கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் 


நடவடிக்கை யாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தது. 

அத்துடன் இந்த ரூபாய் நோட்டுக் களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள காலக்கெடு விதித்தது.

இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால் மக்கள் பெரும் இன்னனுக்கு ஆளானார்கள். புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள அறிமுகம் செய்யப்பட்டன.

பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தவிர ஏற்கனவே நடைமுறை யில் இருந்த மற்ற பழைய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் செல்லு படியாகும் என அறிவிக்க ப்பட்டது.


அதன் பின்னர், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் என படிப்படியாக புதிய ரூபாய் நோட்டுக் களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

புதிய ரூபாய் நோட்டுகள் மாறுபட்ட வடிவங்களிலும், மாறுபட்ட அளவுகளிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. அது போலவே கூடுதல் பாதுகாப்பு அம்சங்க ளுடனும் இந்த நோட்டுகள் வெளி வந்துள்ளன. 

இதைத் தொடர்ந்து தற்போது கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 31, March 2025
Privacy and cookie settings