போதையில் 5 வயது குழந்தையை தவற விட்ட தந்தை !

0 minute read
0
காஞ்சிபுரம் மாவட்டம் சேந்த மங்கலம் பகுதியை சேர்ந்த குமர பிரசாத், தமது 5 வயது குழந்தையுடன் ஓரகடத்திற்கு வந்துள்ளார். ஒரகடத்தில் மது அருந்தி விட்டு போதை தலைக்கேறி, அவர் சாலையிலேயே படுத்துள்ளார். 


போதை தெளிந்து பார்த்த போது குழந்தை காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார்அளித்துள்ளார். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த ஒரகடம் போலீசார், சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில், குழந்தையை மர்ம நபர் ஒருவர் அழைத்துச் செல்வது தெரிய வந்துள்ளது. 

இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தை கடத்தப் பட்டுள்ளதா என, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 18, April 2025
Privacy and cookie settings