குழந்தைகளை அதிகமாக பெற்றுக் கொள்ளுங்கள் - சந்திரபாபு நாயுடு !

0 minute read
0
ஆந்திர மாநிலம் விஜயவாடா வில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுக ளாக ஆந்திராவின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநில மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். 

ஆனால் குறைந்து வரும் மக்கள் தொகையால் முதியவர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உழைக்கும் இளைஞர் களின் எண்ணிக்கை குறையும்.


எனவே ஆந்திராவில் இளைஞர் களின் எண்ணிக்கை குறையாமல் இருக்க பெற்றோர் அதிக குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அரசு தரப்பில் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

உள்ளாட்சித் தேர்தலில் 2 குழந்தை களுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்கள் போட்டியிட விதிக்கப் பட்டிருந்த தடையையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீக்கி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 24, March 2025
Privacy and cookie settings