கழுத்தை அறுத்துக் கொண்டு வாலிபர் தற்கொலை முயற்சி !

0 minute read
0
சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே நேற்று முன்தினம் இரவு சுற்றித் திரிந்த ஒரு வாலிபர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தனது கழுத்தை தானே அறுத்து கொண்டார். 


இதில், ரத்த வழிந்தோடிய தால் அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து, அங்கு பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்தனர். 

தகவலறிந்து ஏழுகிணறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது. விசாரணையில், கொடுங்கையூர் எழில்நகரை சேர்ந்த கார்த்திக் (34) என்பதும், தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார் என்பதும் தெரிய வந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 10, April 2025
Privacy and cookie settings