தமிழகத்தில் 685 மதிப்பெண்களுடன் நீட்டில் ஸ்ருதி முதலிடம் !

1 minute read
0
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேர்வு கடந்த மாதம் ஒடிசாவை தவிர்த்து பிற மாநிலங்களில் 5-ம் தேதியும், ஒடிசாவில் 20-ம் தேதியும் நடைபெற்றது. 
தமிழகத்தில் 685 மதிப்பெண்களுடன் நீட்டில் ஸ்ருதி முதலிடம்


இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று மதியம் இணையத்தில் வெளியிட்டது. இதில் தேசிய அளவில் 56.50 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த நலின் கந்தேல்வால் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 720க்கு 701 மதிப்பெண் பெற்றுள்ளார். ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேச மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர் களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந் துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி 685 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 57-வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். நீட் தேர்வில் மாற்றுத் திறனாளி பிரிவில் தமிழகத்தின் கார்வண்ண பிரபு 575 மதிப்பெண் எடுத்து 5ம் இடம் பிடித்துள்ளார். 

கடந்த ஆண்டு 39.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்தாண்டு 48.57 சதவீதம் பேர் தேர்ச்சியடை ந்துள்ளனர். இதன் மூலம் கடந்தாண்டை விட 9.01 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித் துள்ளது குறிப்பிடத் தக்கது.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 18, April 2025
Privacy and cookie settings