உலக கோப்பை யாருக்கு?- சிஇஓ சுந்தர் பிச்சையின் கணிப்பு !

1 minute read
0
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்பது குறித்து பிரபலங்கள் கணித்து வருகின்றனர். இந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியா தான் கோப்பையை வெல்லும் என்று தெரிவித் துள்ளார்.
உலக கோப்பை யாருக்கு?



இது குறித்து சுந்தர் பிச்சை கூறுகையில் ‘‘உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்தியா - இங்கிலாந்துக்கு இடையில் தான் நடக்கும். ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது என்பது உங்களு க்குத் தெரியும். இரண்டும் மிகமிக சிறந்த அணி. 
இந்தியா கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு பல தடைகளை தாண்ட வேண்டும். நான் முதன் முறையாக அமெரிக்கா வந்த போது, பேஸ்பால் ஆட்டத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்தேன். அந்த வகையில் கிரிக்கெட்டை விட அது சற்று சவாலானது என்று நான் சொல்வேன். என்னுடைய முதல் ஆட்டத்தால் நான் பெருமை அடைந்தேன். 



ஏனென்றால், நான் அடித்த பந்து பின் பக்கம் வெகுதூரம் சென்றது. கிரிக்கெட்டில் அது சிறந்த ஷாட். அந்த ஷாட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறந்த ஷாட் என்று நினைத்தேன். ஆனால், மக்கள் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் ஓடும் போது தன்னுடன் பேட்டையும் கொண்டு செல்வார். 
ஆகவே, நான் பேட்டுடன் தான் ஓடுவேன். அது சற்று கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். பல விஷயங்களை மாற்றி யுள்ளேன். ஆனால், கிரிக்கெட்டு தான் என்னுடன் ஒட்டுக் கொண்டிருக்கிறது’’ என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 23, March 2025
Privacy and cookie settings