மியான்மர் நாட்டில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி !

1 minute read
0
மியான்மர் நாட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மண்டலி நகரம் ஜீடாவ் என்ற அணை அமைந்துள்ளது. இந்த அணையில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த படகில் 25 யாத்ரீகர்கள் இருந்தனர். 
மியான்மர் நாட்டில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி
அவர்கள் அனைவரும் உள்ள நியாங் ஓஹாக் என்ற கிராமத்தில் உள்ள மடாலயத்திற்கு செல்வதற்காக பயணித்துக் கொண்டிருந்தனர். 

படகு அணையின் மையப் பகுதியை கடந்த போது ஏதிர் பாராத தண்ணீரு க்குள் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. 
இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் அணைபகுதிக்கு விரைந்து தண்ணீரில் ழூழ்கிய 11 பேரை உயிருடன் மீட்டனர். 

ஆனாலும் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பயணிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவரை காணவில்லை என மீட்பு குழுவினர் தெரிவித் துள்ளனர். 
விபத்துக் குள்ளான படகின் ஓட்டுநரை மீட்பு குழுவினர் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் அந்த நபரை தேடும் பணி நடைபெறுவ தாகவும் போலீசார் தெரிவித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 22, March 2025
Privacy and cookie settings