கத்தியால் குத்தி கர்ப்பிணி பெண் மரணம் !

1 minute read
0
லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சம்பவ இடத்திலேயே குழந்தை பிறந்தது. 
கத்தியால் குத்தி கர்ப்பிணி பெண் மரணம்
தெற்கு லண்டனில் இருக்கும் க்ராய்டன் பகுதியில் 8 மாத கர்ப்பிணி பெண் கத்தியால் குத்தப் பட்டதாக தகவல் வந்ததை யடுத்து சம்பவ இடத்திற்கு லண்டன் நகர போலீசார் மற்றும் மருத்துவர்கள் சென்றுள்ளனர்.

அங்கு கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கெல்லி மேரி என்ற அந்த பெண்ணை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளனர். 

ஆனால் கெல்லி மாரடைப்பால் உயிரிழந்ததை யடுத்து, அவருக்கு அங்கேயே மருத்துவர்கள் பிரசவம் பார்த்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். 
இதை யடுத்து ஆபத்தான நிலையில் உள்ள அந்த குழந்தைக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் கைது செய்யப் பட்டவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட வில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 31, March 2025
Privacy and cookie settings