வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?

1 minute read
0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3 -வது வாரத்தில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித் துள்ளார்.
வடகிழக்கு பருவமழை எப்போது



சென்னையில் செய்தி யாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,கடந்த ஜூன் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 38 சென்டி மீட்டர் மழை பதிவாகி யுள்ளதாகவும், இது இயல்பை விட 16 சதவீதம் அதிகம் எனவும் கூறினார்.
4 நிமிடத்தில் 4 ஊசி... குழந்தையின் ரியாக்ஷனைப் பாருங்க ஷாக் ஆகிடுவீங்க ! 
சென்னையை பொருத்த வரை ஜுன் ஒன்று முதல் தற்போது வரையிலான காலத்தில் 59 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் இது இயல்பை விட 39 விழுக்காடு அதிகம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.




அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என குறிப்பிட்ட அவர்,இந்த மழைப் பொழிவு இயல்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார். 
அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர். சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடுமென பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 22, March 2025
Privacy and cookie settings