பாழடைந்த வீட்டில் சடலமாக 12 வயது சிறுமி - அதிர்ச்சி தகவல் !

1 minute read
0
தமிழகத்தில் பாழடைந்த வீட்டிலிருந்து 12 வயது சிறுமி சடலமாக மீட்கப் பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பாழடைந்த வீட்டில் சடலமாக 12 வயது சிறுமி


நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான கூட்டப்பனைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அதே ஊரில் உள்ள புனித அந்தோனியார் நடுநிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று பின்னர் வீடு திரும்ப வில்லை. இதை யடுத்து அவர் பள்ளிக்கு அருகே உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சடலமாக மீட்கப் பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.


மாணவி பாலியல் வன்கொடுமை க்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்க லாம் என்று சந்தேகிக்கும் பொலிசார் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அந்த வீடு உள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாக தெரிவித்துள்ள பொது மக்கள் அதற்கு அடிமையான இளைஞர்கள சிலர் இது போன்ற கொடூரத்தில் ஈடுபட்டிருக் கலாம் என கூறி யுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 12, April 2025
Privacy and cookie settings