எடப்பாடி மாமனார் காலமானார் !

1 minute read
0
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் கவுண்டர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77.
எடப்பாடி


சங்ககிரி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக் கிறது.

இதை யடுத்து அவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப் பட்டார்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனை வரும் வழியிலேயே காளியண்ணன் உயிரிழந்துள்ள விட்டதாக தெரிவித் துள்ளனர்.

காலமானார்

முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியின் மனைவி ராதாவின் தந்தை காளியண்ணன் கவுண்டர் சங்ககிரி அருகே உள்ள தேவூர் அம்மா பாளையத்தில் வசித்து வந்தார். 

சேலத்திற்கோ, சென்னைக்கோ பிள்ளைகள் வீட்டிற்கு செல்லாமல் கிராமத்தில் விவசாயத்தை கவனித்துக் கொண்டு வாழ்ந்து வந்தவர் அவர்.

எளிமையானவர்


காளியண்ணன் கவுண்டருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தமகள் பெயர் ராதா. இவர் தான் எடப்பாடி பழனிசாமியின் மனைவி.

இரண்டாவது மகள் பெயர் சுசிலா, மூன்றாவது பிள்ளை வெங்கடேசன். 

மருமகன் முதலமைச் சராக இருந்தாலும் கூட அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எளிமையான முறையில் அனைவரிட த்திலும் அன்புடன் பழகக் கூடியவர்.

காலமானார்

தீபாவளியன்று தேவூர் அம்மா பாளையத்தில் உள்ள இல்லத்தில் இருந்த காளியண்ணன் கவுண்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை யடுத்து அவர் அருகிலுள்ள ஊரான குமார பாளையம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார். 


அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே காளியண்ணன் கவுண்டர் உயிரிழந்து விட்டதாக தெரிவித் துள்ளனர்.

அரசு மருத்துவமனை

காளியண்ணன் கவுண்டருக்கு சிகிச்சை யளிக்கும் மருத்துவர் தீபாவளி என்பதால் அன்று விடுமுறை யில் இருந்துள்ளார். 

இதை யடுத்து தாமதிக்க வேண்டாம் எனக் கருதி அவரின் உறவினர்கள் குமார பாளையம் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர்.

தெரிந்த பெயர்
முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியின் மாமனாரை குஞ்சுபையக் கவுண்டர் என்று அழைத்தால் தான்

சங்ககிரி பகுதியில் அனைவருக்கும் தெரிகிறது. ஏனென்றால் அந்தப் பெயரில் தான் அழைக்கப்பட்டு வந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 16, April 2025
Privacy and cookie settings