கொள்ளையனால் நடிகைகள் பீதி - அலறியடித்து பரிசோதனை !

1 minute read
0
லலிதா ஜீவல்லரி நகை கடையில் கொள்ளை யடித்த முருகனை பற்றி அதிர வைக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கிறது.
கொள்ளையனால் நடிகைகள் பீதி


திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை சுவரில் துளை போட்டு

ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமை யிலான கும்பல் கொள்ளை யடித்து சென்றது.

இந்நிலையில் இந்த கும்பலை சேர்ந்த மணிகண்டன், சுரேஷ் உள்ளிட்ட பலர்

கைது செய்யப் பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தார்.

இந்நிலையில் இவர்களின் பிடியில் சிக்கிய நடிகைகளை முருகன், சுரேஷ் ஆகிய இரண்டு பேரையும் கொள்ளையர்கள் என்று தெரியாமல், நகைக்கடை அதிபர் என்று நம்பி 

நகையை பரிசாக பெற்று அவர்களிடம் பழகிய நடிகைகளின் லிஸ்டை காவல் துறையினர் எடுத்துக் கொண்டு இருக்கின் றனர்.

அவர்கள் கேட்டுக் கொண்டது போல் படத்தில் நடிக்க வில்லை என்றாலும், அவர்கள் கொடுத்த நகைகளை பரிசாக பெற்றது பற்றி விசாரணை செய்ய போலீசார் திட்ட மிட்டுள்ளனர்.

இதனால் கொள்ளையர்கள் என்று தெரியாமல் முருகன், சுரேஷிடம் பழகிய தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் தற்போது பதட்டத்தில் உள்ளனர். 


விசாரணை யில் அந்த நடிகை, இந்த நடிகை என மாறி மாறி சொல்வதால் போலீசாருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எந்த நடிகைகள் என தீவிரமாக விசாரிப்பதுடன், 

சம்பந்தப்பட்ட நடிகைக ளிடமும் நகைகளை பெற்றீர்களா என்று விசாரிக்கும் போது

அவன் சொன்னது உண்மையா என்று தெரிய வரும் என தனிப்படை போலீஸ் காரர்கள் தெரிவிக்கின்றனர்.

போலீஸாரிடம் பிடிபட்ட பிறகு முருகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை நெருங்கிப்பழகும் நடிகைகளிடம் முருகன் மறைத்து அவர்களுடன் நெருக்கத்தில் இருந்துள்ளான். 

போலீஸ் பிடியில் முருகன் சிக்கி, அவனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்துள்ளதால், அதிர்ச்சி யடைந்துள்ள அவனுடன் நெருக்கத்தில் இருந்த நடிகைகள், 

தங்களுக்கும் முருகனிடம் இருந்து செக்ஸ் நோய் பரவி இருக்குமோ என பதறியடித்து மருத்துவ மனைக்கு சென்று எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொண்டிருப்ப தாக கூறுகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 7, April 2025
Privacy and cookie settings